சாத்தூரில் சொத்து பிரச்சனை அண்ணனை குத்தி கொன்ற தம்பி..

IMG 20221129 WA0111 - 2026

சாத்தூரில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை குத்தி கொன்ற தம்பி ரத்த வெள்ளத்தில் சரிந்த அண்ணன் தம்பியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஓ மேட்டுப்பட்டி வைரவ சுவாமி கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் பொன்ராஜ் (58). இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் அதே தெருவில் மிக்சி கிரைண்டர் ஃபேன் சர்வீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி மொட்டையா சாமி (55) இவரும் அதே தெருவில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வருகிறார்.

கூலி வேலை செய்து வரும் மொட்டையா சாமி குடித்துவிட்டு சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிய வருகிறது. நேற்று இரவும் வழக்கம் போல குடித்துவிட்டு பொன்ராஜிடம் தகராறு செய்துள்ளார் இந்த நிலையில் இன்று அதிகாலையில் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்த பொன்ராஜை கடைக்கு வந்த மொட்டையாசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்த மொட்டையாசாமி பதற்றமில்லாமல் வீட்டிற்கு சென்று வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார்வீட்டில் இருந்த மொட்டையசாமியை கைது செய்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட பொன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலை சம்பவம் நடந்த இடத்தில் சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜ் நேரில் விசாரணை மேற்கொண்டார். அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட கொலை சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories