சாத்தூரில் சொத்து பிரச்சனை அண்ணனை குத்தி கொன்ற தம்பி..

IMG 20221129 WA0111 - 2026

சாத்தூரில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை குத்தி கொன்ற தம்பி ரத்த வெள்ளத்தில் சரிந்த அண்ணன் தம்பியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஓ மேட்டுப்பட்டி வைரவ சுவாமி கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் பொன்ராஜ் (58). இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் அதே தெருவில் மிக்சி கிரைண்டர் ஃபேன் சர்வீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது உடன் பிறந்த தம்பி மொட்டையா சாமி (55) இவரும் அதே தெருவில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வருகிறார்.

கூலி வேலை செய்து வரும் மொட்டையா சாமி குடித்துவிட்டு சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிய வருகிறது. நேற்று இரவும் வழக்கம் போல குடித்துவிட்டு பொன்ராஜிடம் தகராறு செய்துள்ளார் இந்த நிலையில் இன்று அதிகாலையில் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்த பொன்ராஜை கடைக்கு வந்த மொட்டையாசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

கொலை செய்த மொட்டையாசாமி பதற்றமில்லாமல் வீட்டிற்கு சென்று வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். கொலை சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீசார்வீட்டில் இருந்த மொட்டையசாமியை கைது செய்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட பொன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலை சம்பவம் நடந்த இடத்தில் சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜ் நேரில் விசாரணை மேற்கொண்டார். அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட கொலை சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Entertainment News

Popular Categories