கல்வித் தரத்தில் பின் தங்கிய தமிழகம்! மத்திய அரசு இடைநிலை கல்வி வாரியம் திடுக் தகவல்!

government school - 2026

33 சதவீதம் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், நாட்டில் அரசுப்பள்ளிகளின் கல்வித்தரத்தில் தமிழகம் 48 புள்ளிகளுடன் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசின் இடைநிலைக்கல்வி வாரிய ஒப்புதல் குழு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 24,321 அரசு தொடக்கப்பள்ளிகள், 5,025 அரசு நிதியுதவி பள்ளிகள், 6,303 தனியார் ஆங்கிலவழி பள்ளிகள் என மொத்தம் 35,649 தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், 6,966 அரசு நடுநிலைப் பள்ளிகள், 1,513 நிதியுதவி நடுநிலைப் பள்ளிகள், ஆயிரத்து ஒன்று தனியார் நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 9,480 பள்ளிகள் உள்ளன.

இதில் 6,966 நடுநிலைப்பள்ளிகளில் 8.46 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதேநேரத்தில், அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 31 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், இந்த நியதி தமிழகத்தில் இல்லை என்றும், தமிழ்நாட்டில் உள்ள 3ல் 1 பங்கு அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாட ஆசிரியர்கள் இல்லை என்றும், பெரும்பாலான கிராமப்புற நடுநிலைப் பள்ளிகளில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் மட்டுமே 5 பாடங்களை கற்பிக்கும் நிலை உள்ளது என்றும் மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது.

இதனால் அரசுப்பள்ளி மாணவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தாய்மொழி வாசிப்புத்திறன், பிற பாடங்களின் கற்கும் திறன் போதிய அளவில் இல்லை. இதனால் அரசு பள்ளிகளுக்கான கல்வி தர நிர்ணய பட்டியலில் மொத்தம் 180 புள்ளிகளுக்கு தமிழகம் வெறும் 48 புள்ளிகளை மட்டுமே பெற்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று மத்திய அரசின் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் ஒப்புதல் குழு கூட்டத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

school 000713 - 2026

இதற்கு அரசு நடுநிலைப்பள்ளிகளில் 33 சதவீதம் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே காரணம் என்றும், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பாட ஆசிரியர்களின் எண்ணிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகரிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த குழு வலியுறுத்தியுள்ளது.மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள இந்த தகவல் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த விவரம் உண்மையானதுதான். குறிப்பாக கிராமப்புற பள்ளிகள்தான் இத்தகைய இக்கட்டான நிலையில் சிக்கி தவித்து வருகின்றன.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, நீலகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை என பல மாவட்டங்களில் பல நடுநிலைப் பள்ளிகளில் 2 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லா பாடங்களையும் இவர்களே நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, அடித்தள கல்வியை மேம்படுத்தினால் மட்டுமே உயர்கல்வியில் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியை பெற முடியும்.

எனவே, தமிழக அரசும், பள்ளிக்கல்வித்துறையும் மேலும் தாராள போக்குடன் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகளுக்கான தர நிர்ணய பட்டியலில் நாம் முன்னேற்றத்தை காண முடியும்’ என்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories