தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ட்வீட்!

07 Sep05 Pranab Mukherjee
Pranab Mukherjee

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பிற்பகல், ஒரு தனி நடைமுறை சோதனைக்காக மருத்துவமனை சென்ற போது கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என முடிவுகளில் தெரிய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

2012 முதல் 2017 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி, கடந்த வாரத்தில் அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் தங்களை முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தி கோவிட் -19 க்கு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த கொரோனா தொற்று நாட்டில் 22 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

“ஒரு தனி நடைமுறைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, ​​இன்று COVID19 பாசிட்டிவ் என எனக்கு பரிசோதனை முடிவு தெரியவந்தது. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள், தயவுசெய்து தனிமைப்படுத்தி, COVID-19 க்கு பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ” என்று 84 வயதான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ட்வீட் செய்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி ட்வீட்டை வெளியிட்ட சில நிமிடங்களில், அவர் விரைவாக குணமடைய விரும்புவதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளை வெளியிட்டனர்.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

“தயவுசெய்து கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவாக மீண்டு வரவும் உங்களின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் குறிப்பிட்டார்.

“நீங்கள் விரைவாக மீளவும் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையையும் பெற விரும்புகிறேன்” என்று டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அஜய் மேக்கன் ட்வீட் செய்துள்ளார்.

“ஸ்ரீ பிரணாப் முகர்ஜி நலமான வாழ்வுடன் திகழவும் விரைவாக மீள வேண்டும் என்றும் நான் பிரார்த்திக்கிறேன். அவர் விரைவில் வைரஸிலிருந்து மீள்வதில் வெற்றி பெறுவார் என்று நான் நம்புகிறேன். அவருக்கு வலிமையும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துக்கள்” என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் சித்தராமையா உட்பட நாட்டின் பல உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என சோதனை செய்துள்ளனர்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மூன்றாவது நாடு இந்தியா. இன்று காலை, நாடு 20 லட்சத்தை தாண்டி நான்கு நாட்களுக்குப் பிறகு, 22 லட்சம் கொரோனா வைரஸ் கேஸ்களை கடந்துவிட்டது. 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இறந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories