மூட நம்பிக்கையும் பகுத்தறிவும்! ஒப்பீட்டு ரகசியங்கள்!

15 Aug10 Solar elipse - 2026

நம்பிக்கை என்பதே மூடத்தனம் என்றார் கண்ணதாசன். அந்த மூடத்தனத்தைக் கைக் கொண்டிருப்பது பகுத்தறிவு ஆகாது என்றார் அவர். நம்பிக்கை வைப்பதாகவோ, நம்பிக்கை கொண்டிருப்பதாகவோ ஒன்றை நம்புவதே அறிவுக்கு அப்பாற்பட்டதாக, பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகக் கருதப் படும்.

இப்போது பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவு, கடவுள் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை, இவற்றை வைத்துக் கொண்டு எது மூட நம்பிக்கை, எது பகுத்தறிவு என இருதரப்பினர் பார்வையில் சொல்லப்படும் கருத்துகள்..

கோவிலுக்குள் சிலை வைத்து வழிபட்டால் மூட நம்பிக்கை. தெருவுக்குத் தெரு சிலை வைத்து வணங்கினால் பகுத்தறிவு.

கடவுளுக்கு வேண்டிக் கொண்டு முடியிறக்கினால் மூட நம்பிக்கை தலைவனுக்காக சமாதியில் முடியிறக்கினால் பகுத்தறிவு.

இறைவன் உதித்த தினத்தில் வழிபட்டால் மூட நம்பிக்கை. தலைவன் பிறந்த நாளைக் கொண்டாடினால் பகுத்தறிவு.

உணர்ச்சி மிகுதியில் தீ மிதித்தால் மூட நம்பிக்கை. உணர்ச்சிக்கு உற்சாக பானம் ஏற்றிக் கொண்டு தீ வைத்தால் பகுத்தறிவு.

கிருஷ்ணா, ராமா, அல்லா, ஏசப்பா என்று உள்ளம் உருக அழைத்தால் மூட நம்பிக்கை. தலைவா என்று ஊர் கேட்க கூவினால் பகுத்தறிவு.

பிரசாதம் என்றால் மூட நம்பிக்கை. அன்னதானம் என்றால் பகுத்தறிவு..

மொத்தத்தில் இல்லாததை இருப்பதாக நினைத்து மதிப்பு தந்து வணங்கினால் மூட நம்பிக்கை. இருந்தது இல்லாததான பின் தன் மதிப்புக்காக வணங்கினால் பகுத்தறிவு.

இதுதான், இந்த அரை நூற்றாண்டு பகுத்தறிவு மார்க்கம் கற்றுக் கொடுத்துள்ள நுண்ணறிவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories