அ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

health tips 1
health tips 1

இரத்த சுத்திக்கு

செம்பரத்தை இதழ்களோடு கற்கண்டை துள் செய்து கவந்து நீர்ச்சத்து நீங்கும் வரை சில தினங்கள் வெயிலில் காய வைத்தெடுத்து சிறிது ஏலம், லவங்கம் இவற்றைத் தூள் செய்து ஜாடியில் எடுத்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிரெய்ன் அளவு சாப்பிட்டு வர இரத்த சுத்தியும், மன உற்சாகமும் உண்டாகும்.

குங்குமப்பூ சேர்ந்த குல்கந்து மணமும், சுவையும் பெறுவதோடு இரத்த சுத்தியையும் உண்டாக்கும். குங்குமப் பூவை தூள் செய்து 5 கிரெய்ன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர இரத்த சுத்தியும் மனதிற்கு உற்சாகமும் ஏற்படும்.

இரத்த சோகையா?

உள் அவயங்களில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சிக்கும் கரிசி லாங்கண்னி கை கண்ட உணவு. மஞ்சள் காமாலைக்கும். இரத்த சோகைக்கும் பாண்டு ரோகத்திற்கும் இது மிகவும் நல்லது. கரிசலாங் கண்ணி இலையைக் கொண்டு பல் துலக்கி வர பல் நோய் அணுகாது.

கொய்யாப்பழம் சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாகும். பற்களும்
பலப்படும். அப்பழத்தில் விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தி
இருப்பதனால் வியாதியை ஏற்படுத்தும் விஷக்கிருமிகள் இரத்தத்தில்
இருந்தால் அதை உடனே கொன்று விடும்.

கேரட், தக்காளி இவற்றை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழத்தையும் அடிக்கடி சாப்பிட சோகை நோய் குணமாகும்.

இரத்தம் விருத்தியடைய…

தான்றிக்காய், நெல்விக்காய். கடுக்காய் இம்மூன்றையும் சம எடை உலர்த்தி தூள் செய்து தயாரிப்பது திரிபலா சூரணம் என்பது. இது வாய்வுத் தொல்லை, இரத்த விருத்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, மூல ரோகங்கள் முதலியவற்றிற்கு மிகவும் நல்லது.

சிறுகீரையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வர இரத்த விருத்தி ஏற்படுவதுடன் உடலும் அழகு பெறும்.

கொத்துமல்லிக் கீரையை பசுமையாக வாங்கி வந்து இரண்டொன் றாகக் கிள்ளி நெய்யில் வதக்கி சூடான சாதத்தில் கலந்து சாப்பிட இரும்புச் சத்து ஏராளமாக கிடைத்து இரத்த விருத்தி அடையும்.

நன்னாரி வேரை இடித்துச் சாறெடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர தோல் சம்பந்தப்பட்ட வியாதியையும் இரத்தத்தில் உள்ள கோளாறு களையும் குணப்படுத்தும்.

இரத்தக் கொதிப்புக்கு…

வெள்ளரிப் பிஞ்சை பச்சையாகவோ அல்லது பருப்புடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம். வெள்ளரிப் பிஞ்சு கிடைக்காத காலத்த வெந்தயக் கீரையை சமைத்து சாப்பிட இரத்தக் கொதிப்பு ‘ குறையும்.

சர்ப்பகந்தி வேரையும் நிலவேம்பின் வேரையும் சமமாக எடுத்துத் தூள் செய்து ஐந்து கிரெய்ன் வரை காலை, மாலை ஆகாரத்திற்கு முன் சாப்பிட்டு வர இரத்த அழுத்த நோய் பூரண குணமடையும்.

முற்றின இஞ்சியை எடுத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேனையும் கலந்து சாப்பிட தலைச் சுற்றலும் நிற்கும். இரத்த அழுத்தமும் குறையும்.

இஞ்சி சாற்றில் தேனும், சிறிதளவு எலுமிச்சம்பழ ரசத்தையும் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குறைந்தபட்சம் ஏழு வாரங்கள் சாப்பிட பூரண குணம் தெரியும்.

தினமும் காலையில் பதநீர் சாப்பிட்டு வர இரத்த அழுத்த நோய் மற்றும் இருதய சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

தினமும் காலையில் ஓர் அவுன்ஸ் துளசிச்சாறு குடிக்க இரத்தக்குழாய் அடைப்பு, இரத்த அழுத்த நோய் விலகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories