தாய்ப்பால் பெருக…
குழந்தைக்கு பால் கொடுக்கும் முன் பொறுக்கும் சூட்டில் ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள். வாரம் ஒருமுறை பிள்ளைச் சுறாமீன் வாங்கி குழம்பு வைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
அஜீரணத்துக்கு…
சீரகம். இஞ்சி, கறிவேப்பிலை இவற்றைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது நீர் சேர்த்துக் குடிக்க அஜீரணம் குணமாகும்.
சாதாரண இருமலுக்கு…
எலுமிச்சம்பழச்சாறு. தேன், கிளிசரின் மூன்றையும் சம அளவு கலந்து தினமும் மூன்று வேளை ஒரு ஸ்பூன் அளவு உள்ளுக்கு விழுங்க இருமல் குணமாகும்.
தாழம்பூ தைலம்
தலைவலி, வாதவலி முதலியவற்றை கட்டுப்படுத்தும். காதில் இரண்டு சொட்டுக்கள் விட காதுவலி மறையும்.
தாழம்பூவின் மகத்துவம்
தாழம்பாயில் படுத்தால் பித்த தோஷங்கள் நீங்கும். பாண்டு ரோகம் குணமாகும். தலைச்சுற்றல் இருக்காது. மூத்திர நோய்கள் விலகும்.