அப்பாச்சி தீர்வு: மூலநோய், ஆசனவாய் அரிப்பு, புண், உஷ்ணக் காய்ச்சல்!

health tips - 2026

மூலநோய் குணமாகும்.

முடக்கொத்தாள் வேரை நீரில் அலசி சுத்தப்படுத்தி பொடிப்பொடியாய்
நறுக்க வேண்டும். பின்பு ஒருகைப்பிடி அளவெடுத்துச்சட்டியிலிட்டு ஒருடம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பிலேற்றி நன்றாகக் காய்ச்சவும் நன்றாகக்கொதித்த பின்னர் இறக்கி வடிகட்டி காலையும் மாலையும் அரை டம்ளர் குடித்துவர மூலநோய் குணமாகும்.

ஆசனவாய் அரிப்பு

விளக்கெண்ணெயில் காஞ்சாங்கோரை இலையைப் போட்டு வாட்டவேண்டும். இளஞ்சூட்டில் இருக்கும்போது அந்த இலையை எடுத்து ஆசன வாயில் கட்டினால் அரிப்பு அகலும்.

ஆண், பெண் உறுப்பு புண்கள்

ஆண், பெண் உறுப்புக்களில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த சுலபமான வழி ஒன்று உண்டு. குங்குமப் பூவுடன் தேனைக்கலந்து அரைத்து சாந்துபோலாக்கி புண்கள் உள்ள இடங்களில் பூசி வர ஒரு சில நாட்களிலேயே இப்புண்கள் ஆறிவிடும்.

எவ்வித்ககாய்ச்சலுக்கும்

சுண்டுவிரலில் பாதி அளவுக்கு இஞ்சியையும், ஒரு கைப்பிடி அளவுக்கு புதினாக் கீரையையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை அம்மியில் வைத்து இடித்துசாறை எடுத்து சுத்தமான துணியில் வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதனுடன ஒரு தேக்கரண்டி அளவு சுத்தமான தேனைச் சேர்த்துக்குழப்பி உண்ணவேண்டும். உடனே வெதுவெதுப்பான வெந்நீர் குடிக்கவேண்டும். இவ்வாறு காலை, மாலை என ஆறு வேளை உண்டுவர எவ்விதக்காய்ச்சலும் குணமாகும்.

உஷ்ணக் காய்ச்சல்

ஒரு தேக்கரண்டி அளவு பச்சைக் கொத்தமல்லியையும், பெரிய நெல்லிக்காய் அளவுக்கு சுக்கையும், கைப்பிடி அளவுக்கு விஷ்ணு கிரந்தி இலையையும் எடுத்துக்கொண்டு அம்மியில் வைத்து தட்டவேண்டும்.

பின்பு அவற்றை ஒரு சட்டியில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து லேசான நெருப்பில் எரித்து கொதிக்க வைக்கவேண்டும். மூன்று டம்ளர் அளவுக்கு கஷாயம் போலானவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். அதை காலை, பகல், இரவுஎன மூன்று வேளைக்கும் பிரித்து அருந்திவரை உஷ்ணக் காய்ச்சல் குணமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories