தத்தெடுத்து வளர்த்த சிறுமிகள் பலாத்காரம்: ஓய்வுபெற்ற விஞ்ஞானி கைது

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தத்து எடுத்து வளர்த்த 3 சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனத்தில் (நீரி) விஞ்ஞானியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மக்சூத் அன்சாரி (72).

இவர் 3 பெண் குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளார். இவர்களில் 16 வயது மூத்தப் பெண் அன்சாரிக்கு எதிராக தன்டோலி காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், தான் 1-ம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து அன்சாரி தன்னிடம் தவறாக நடந்துவந்ததாகவும் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக சமாதானம் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

11 வயது மற்றும் ஆறரை வயது கொண்ட மற்ற இரு சிறுமிகளும் அன்சாரி மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என அச்சுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்புகார் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அன்சாரி மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு பதிவு செய்த போலீஸார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “அன்சாரி ஏற்கெனவே 2 முறை திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தைகள் இல்லை. அவரது 2 மனைவிகளும் அவரை விட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில் பெண் குழந்தைகளை வளர்த்து படிக்க வைப்பதாகக் கூறி தத்து எடுத்ததாகக் கூறுகிறார். ஆனால் அவரது வீட்டை சோதனையிட்டதில் இதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை” என்றனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமிகளின் படிப்பு மற்றும் பராமரிப்புச் செலவை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுமிகள் மூவரும் தற்போது அரசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories