வருமான வரியை ஒழிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி!

Published:

11 June25 Subramanian swamy - 2026

பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் வருமான வரி ஒழிக்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.

மேலும் நிரந்தர வைப்புத்தொகை மீதான வட்டியை உயர்த்தி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர் யோசனை கூறியிருக்கிறார்.

சண்டிகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம், பொருளாதார வளர்ச்சிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பலனைத் தருமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, வருமான வரி ஒழிக்கப்பட வேண்டும் , நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை ஒன்பது சதவிகிதமாக உயர்த்த வேண்டும், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை ஒன்பது சதவிகிதமாக குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்த மூன்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும் என்றார் அவர்.

பொருளாதார வளர்ச்சியை வெற்றிப்பாதைக்குத் திருப்புவது தொடர்பாக தான் ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும், அது வரும் 5ஆம் தேதி வெளியாகும் எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img