ஜன் தன் கணக்கில் ரூ.74 ஆயிரம் கோடி: வருமான வரித் துறை அதிர்ச்சி

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கடந்த மாத இறுதி வரை ஜன் தன் வங்கி கணக்கில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்த இந்த முதலீட்டால் வருமான வரித் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக் கப்பட்டது. ரூ.2.50 லட்சம் வரை தனி நபர்கள், இல்லத்தரசிகள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி பழைய ரூபாய் நோட்டுகளை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.இதையடுத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் பல்வேறு வழி களில் தங்களிடம் உள்ள கோடிக் கணக்கான கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை மக்களுக்காக கடந்த 2014-ல் மத்திய அரசு தொடங்கிய ஜன் தன் வங்கி கணக்கில் கறுப்புப் பண பதுக் கல்காரர்கள் பணத்தை முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம்குறித்து நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி ‘‘ஜன் தன் வங்கி கணக்கில் முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கே சொந்தம். ஏழைகள் கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்களை கண்டறிந்து சிறைக்கு அனுப்ப புதிய திட்டம் வகுத்து வருகிறேன்’’ என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 25.85 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட் டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி வரை ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.45,636.61 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தொகை திடீரென ரூ.28,685 கோடி அதிகரித்துள்ளது.அதே சமயம் 22.85 சதவீத ஜன் தன் கணக்குகளில் இதுவரை பூஜ்ய நிலுவை (ஜீரோ பேலன்ஸ்) நிலையே நீடிக்கிறது. ஜன் தன் வங்கி கணக்கில் உள்ள தொகை களில் ரூ.1.64 கோடி கணக்கில் வராத பணமாக இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ரூ.40 லட்சம் பறிமுதல்?

பிஹாரில் அரா பகுதியில் வசிக்கும் சித்தாரா தேவி என்பவர் தனது ஜன் தன் கணக்கில் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். வருமான சான்றுகளை அவர் அளிக்கத் தவறிவிட்டார். இதனால் அவரது வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.40 லட்சமும் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என தகவல் வெளி யாகி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories