ஜன் தன் கணக்கில் ரூ.74 ஆயிரம் கோடி: வருமான வரித் துறை அதிர்ச்சி

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கடந்த மாத இறுதி வரை ஜன் தன் வங்கி கணக்கில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்த இந்த முதலீட்டால் வருமான வரித் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக் கப்பட்டது. ரூ.2.50 லட்சம் வரை தனி நபர்கள், இல்லத்தரசிகள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி பழைய ரூபாய் நோட்டுகளை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.இதையடுத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் பல்வேறு வழி களில் தங்களிடம் உள்ள கோடிக் கணக்கான கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை மக்களுக்காக கடந்த 2014-ல் மத்திய அரசு தொடங்கிய ஜன் தன் வங்கி கணக்கில் கறுப்புப் பண பதுக் கல்காரர்கள் பணத்தை முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம்குறித்து நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி ‘‘ஜன் தன் வங்கி கணக்கில் முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கே சொந்தம். ஏழைகள் கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்களை கண்டறிந்து சிறைக்கு அனுப்ப புதிய திட்டம் வகுத்து வருகிறேன்’’ என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 25.85 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட் டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி வரை ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.45,636.61 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தொகை திடீரென ரூ.28,685 கோடி அதிகரித்துள்ளது.அதே சமயம் 22.85 சதவீத ஜன் தன் கணக்குகளில் இதுவரை பூஜ்ய நிலுவை (ஜீரோ பேலன்ஸ்) நிலையே நீடிக்கிறது. ஜன் தன் வங்கி கணக்கில் உள்ள தொகை களில் ரூ.1.64 கோடி கணக்கில் வராத பணமாக இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ரூ.40 லட்சம் பறிமுதல்?

பிஹாரில் அரா பகுதியில் வசிக்கும் சித்தாரா தேவி என்பவர் தனது ஜன் தன் கணக்கில் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். வருமான சான்றுகளை அவர் அளிக்கத் தவறிவிட்டார். இதனால் அவரது வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.40 லட்சமும் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என தகவல் வெளி யாகி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories