ஜன் தன் கணக்கில் ரூ.74 ஆயிரம் கோடி: வருமான வரித் துறை அதிர்ச்சி

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கடந்த மாத இறுதி வரை ஜன் தன் வங்கி கணக்கில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்த இந்த முதலீட்டால் வருமான வரித் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக் கப்பட்டது. ரூ.2.50 லட்சம் வரை தனி நபர்கள், இல்லத்தரசிகள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி பழைய ரூபாய் நோட்டுகளை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.இதையடுத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் பல்வேறு வழி களில் தங்களிடம் உள்ள கோடிக் கணக்கான கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை மக்களுக்காக கடந்த 2014-ல் மத்திய அரசு தொடங்கிய ஜன் தன் வங்கி கணக்கில் கறுப்புப் பண பதுக் கல்காரர்கள் பணத்தை முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம்குறித்து நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி ‘‘ஜன் தன் வங்கி கணக்கில் முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கே சொந்தம். ஏழைகள் கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்களை கண்டறிந்து சிறைக்கு அனுப்ப புதிய திட்டம் வகுத்து வருகிறேன்’’ என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 25.85 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட் டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி வரை ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.45,636.61 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தொகை திடீரென ரூ.28,685 கோடி அதிகரித்துள்ளது.அதே சமயம் 22.85 சதவீத ஜன் தன் கணக்குகளில் இதுவரை பூஜ்ய நிலுவை (ஜீரோ பேலன்ஸ்) நிலையே நீடிக்கிறது. ஜன் தன் வங்கி கணக்கில் உள்ள தொகை களில் ரூ.1.64 கோடி கணக்கில் வராத பணமாக இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ரூ.40 லட்சம் பறிமுதல்?

பிஹாரில் அரா பகுதியில் வசிக்கும் சித்தாரா தேவி என்பவர் தனது ஜன் தன் கணக்கில் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். வருமான சான்றுகளை அவர் அளிக்கத் தவறிவிட்டார். இதனால் அவரது வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.40 லட்சமும் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என தகவல் வெளி யாகி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories