December 5, 2025, 1:46 PM
26.9 C
Chennai

ஜன் தன் கணக்கில் ரூ.74 ஆயிரம் கோடி: வருமான வரித் துறை அதிர்ச்சி

பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக கடந்த மாத இறுதி வரை ஜன் தன் வங்கி கணக்கில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்த இந்த முதலீட்டால் வருமான வரித் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கடந்த நவம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக் கப்பட்டது. ரூ.2.50 லட்சம் வரை தனி நபர்கள், இல்லத்தரசிகள் தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி பழைய ரூபாய் நோட்டுகளை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.இதையடுத்து கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் பல்வேறு வழி களில் தங்களிடம் உள்ள கோடிக் கணக்கான கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக ஏழை மக்களுக்காக கடந்த 2014-ல் மத்திய அரசு தொடங்கிய ஜன் தன் வங்கி கணக்கில் கறுப்புப் பண பதுக் கல்காரர்கள் பணத்தை முதலீடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம்குறித்து நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி ‘‘ஜன் தன் வங்கி கணக்கில் முதலீடு செய்யப்பட்ட கறுப்புப் பணம் ஏழைகளுக்கே சொந்தம். ஏழைகள் கணக்கில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்தவர்களை கண்டறிந்து சிறைக்கு அனுப்ப புதிய திட்டம் வகுத்து வருகிறேன்’’ என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கடந்த நவம்பர் 9-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள 25.85 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.74,321.55 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சகம் தகவல் வெளியிட் டுள்ளது. நவம்பர் 9-ம் தேதி வரை ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.45,636.61 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இந்தத் தொகை திடீரென ரூ.28,685 கோடி அதிகரித்துள்ளது.அதே சமயம் 22.85 சதவீத ஜன் தன் கணக்குகளில் இதுவரை பூஜ்ய நிலுவை (ஜீரோ பேலன்ஸ்) நிலையே நீடிக்கிறது. ஜன் தன் வங்கி கணக்கில் உள்ள தொகை களில் ரூ.1.64 கோடி கணக்கில் வராத பணமாக இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ரூ.40 லட்சம் பறிமுதல்?

பிஹாரில் அரா பகுதியில் வசிக்கும் சித்தாரா தேவி என்பவர் தனது ஜன் தன் கணக்கில் ரூ.40 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். வருமான சான்றுகளை அவர் அளிக்கத் தவறிவிட்டார். இதனால் அவரது வங்கி கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். ரூ.40 லட்சமும் விரைவில் பறிமுதல் செய்யப்படும் என தகவல் வெளி யாகி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories