ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் அங்கிதா. இவரது கணவர் பிரகாஷ். இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். மேலும் அங்கிதாவிற்கு தனியார் பள்ளியில் வேலை கிடைத்த நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்புடன் காவல்நிலையம் வந்த தனது மனைவியை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயில் நிலையம் அருகே உள்ள குளத்தில் ஆசிரியை உயிரிழந்த நிலையில் சடலமாக மிதந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து இது கொலையா தற்கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.