விக்ரம் லேண்டரை கண்டறிய மீண்டும் முயற்சி! நாசா வெளியிட்ட தகவல்!

isro chandrayaan2 - 2026

சந்திரனில் இரவாக இருந்தபோது, ​விக்ரம் லேண்டர் குறித்த தேடலில் நம்பிக்கை இல்லாதிருந்தது. ​இருளில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள் தெளிவான தகவலைத் தரவில்லை. ஆனால், இப்போது விக்ரம் லேண்டர் குறித்த நம்பிக்கை ஒளி மீண்டும் திரும்பியிருக்கிறது.

சந்திரயான் -2 உண்ட அனுப்பப் பட்ட விக்ரம் லேண்டர் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்று நம்பப் படுகிறது. சந்திரயான் -2 உடன் அனுப்பப் பட்ட விக்ரம் லேண்டரின் இடம் கண்டறியப்பட்டுள்ளது. அது தனக்கான பணியைச் செய்யும் சற்று முன்னதாக, இஸ்ரோ உடனான தொடர்பை இழந்தது. அதன் பின்னர் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எந்த வெற்றியும் கிட்டவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

விக்ரம் லேண்டரின் இருப்பிடம் தெரிய வந்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் சரியான இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், விக்ரம் இன்னும் சந்திரனின் மேற்பரப்பில் உள்ளதாக அறியப்படுகிறது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து
Chandrayaan 2 - 2026

ஞாயிற்றுக்கிழமை, சந்திரயான் -2 இன் சுற்றுப்பாதையில் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை எடுத்துள்ளது! இது விக்ரமின் இருப்பிடத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் சிவன். அவரது கூற்றுப்படி, இஸ்ரோ மீண்டும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறது. மறுபுறம், நாசாவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

எல்.ஆர்.ஓ உதவியுடன், சந்திரயான் 2, லேண்டர் விக்ரமின் தெளிவான படங்களை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாசாவின் எல்.ஆர்.ஓ, விக்ரம் லேண்டரைக் கடந்து சென்றது இது இரண்டாவது முறை. முன்னதாக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று, நாசாவின் எல்.ஆர்.ஓ விக்ரம் லேண்டரின் படங்களை எடுத்தது. ஆனால் அந்த நேரத்தில் நிலவில் ஒளி இன்றி, இருள் சூழ்ந்திருந்தது. ஆனால், இந்த முறை மறு புறம் என்பதால், படங்கள் முன்பு எடுக்கப் பட்டதை விட வெளிச்சத்தில் சற்று தெளிவாக எடுக்கப் பட்டுள்ளன.

விஞ்ஞானிகள் தற்போது எல்.ஆர்.ஓ புகைப்படங்களை ஆராய்ந்து வருகின்றனர். புகைப்படங்களின் உதவியுடன், விக்ரம் லேண்டரின் சரியான நிலையைக் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்ரமின் சரியான இடம் கண்டுபிடிக்கப்பட்டால், அது விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும். இதற்குப் பின்னர், இஸ்ரோவுடனான தொடர்பு இழக்கப்படுவதற்கு சற்று முன்னர், லேண்டர் விக்ரமுக்கு என்ன ஆனது என்பதைக் கண்டறிய முடியும்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

செப்டம்பர் 7 ஆம் தேதி, சந்திரயான் 2 இன் லேண்டர் விக்ரம் சந்திரனின் மேற்பரப்பில் மென்மையான தரையிறங்கலைத் தவறவிட்டது. அப்போதிருந்து, இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது. தொடர்பு துண்டிக்கப் பட்ட போது, ​​விக்ரம் சந்திரனில் இருந்து 2.1 கிமீ., தொலைவில் இருந்தது.

விக்ரம் லேண்டர் கடினமான தரையிறக்கம் மேற்கொண்டதால், அது தொடர்பை இழந்தது. ஆயினும், அதன் பிறகான அடுத்த 14 நாட்களில் விக்ரமைத் தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ நம்பியது.

இருப்பினும், சந்திரனில் இரவு வந்துவிட்டதால் அதன் பிறகு நம்பிக்கையை அனைவரும் இழந்தனர். இந்த நேரத்தில் சந்திரனில் அந்தப் பகுதியில் ஒளி ஏற்பட்டுள்ளது. எனவே விக்ரமின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories