- சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு.
- கல்வித் துறைக்கு ரூ. 99,300 கோடி ஒதுக்கீடு.
- ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்ட திட்டம்.
- தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு .
- ஜல்ஜீவன் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோடி ஒதுக்கீடு .
- 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டம்.
- ஆன்லைன் மூலம் பட்டப்படிப்புக்கு இணையான சான்றிதழ் படிப்பு வழங்க ஆலோசனை .
- தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் நிறுவப்படும் .
- மாவட்ட மருத்துவமனை அளவில் மருத்துவ கல்லூரிகள் விரிவுபடுத்தப்படும்.
- இந்தியாவில் படிப்போம் என்ற திட்டம் முன்னெடுக்கப்படும் .
- திறன்மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு .
- 2024க்குள் நாடு முழுவதும் 100 புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்.
- ஆண்களை விட பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்.
- ஏழை, எளிய மக்களுக்கான பயன்கள், மோடி ஆட்சியில் நேரிடையாக சென்றடைகின்றன.
- புதிதாக 16 லட்சம் வரிதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
- தொழில்நுட்பத்தின் உதவியுடன் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கப்படும் .
- தோட்டக்கலைத் துறையின் உற்பத்தி உணவு தானியங்கள் உற்பத்தியைவிட அதிகமாக உள்ளது.
- மழை குறைந்த இடங்களில் ஒருங்கிணைந்த விவசாயத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- விவசாயிகளுக்காக கிஷான் ரயில் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது .
- கிராமப்புற பெண்களுக்கு தானிய லட்சுமி சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் .
- விவசாயம், ஊரக வளர்ச்சி, பாசனம் தொடர்பான திட்டங்களுக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு .
- 2023ஆம் ஆண்டுக்குள் டெல்லி- மும்பை இடையே விரைவு சாலை.
- 2024ஆம் ஆண்டுக்குள் முக்கிய 12 தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் .
- 16 ஆயிரம் கி.மீ சாலைப்பணி நடப்பது உறுதி செய்யப்படும்.
- மத்திய பட்ஜெட் தாக்கல் – ஜம்மு காஷ்மீர் மேம்பாட்டிற்கு ரூ.30,757 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
- நடப்பாண்டில் இருந்து ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும்.
- ஏற்றுமதி கடன் வழங்குவதற்கு நிர்விக் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் .
- அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.100 லட்சம் கோடி முதலீடு .
- தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு .
- உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான திறன்களை மேம்படுத்த புதிய அமைப்பு .
- பழங்குடியின அருங்காட்சியகம் ராஞ்சியில் அமைக்கப்படும்.
- ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம், அமைக்கப்படும்.
- இதை தவிர நாடு முழுவதும் 4 அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.
- புதிய 5 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் .
- மின்னணு பொருட்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை .
- தொழில்முனைவோர் நடவடிக்கைகள் இந்தியாவின் முதுகெலும்பாக உள்ளது .
- 550 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்து தரப்படும் .
- சிந்து நாகரீகம் முதல் தற்போது வரை வணிகம், வர்த்தகத்துறையில் சிறப்பான செயல்பாடு.
- ஜவுளித்துறைக்கு ரூ.1,480 கோடி நிதி ஒதுக்கீடு.
- விரைவில் தேசிய சரக்கு கையாளுதல் கொள்கை கொண்டுவரப்படும் .
- புதிய தேசிய கல்வி கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் .
- 2026க்குள் பல்கலைக் கழகங்களில் 150 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளது
- வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள் திட்டம்.
- ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும் .
- ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே வருமான வரி .
- 6 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் கொடுக்கப்பட்டுள்ளது.
- குழந்தைகள் ஊட்டச்சத்து திட்டங்களுக்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு.
- தேசிய அளவில் ஊட்டச்சத்து திட்டங்களுக்கான பிரசாரம் முன்னெடுக்கப்படும் .
- பாரத் நெட் திட்டத்திற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மின்னணு திட்டங்களில் முன்னுரிமை.
- தேசிய அளவில் 2 புதிய அறிவியல் திட்டம் உருவாக்கப்படும் .
- புராதன சின்னங்களை பாதுகாக்க தனி நிறுவனம் உருவாக்கப்படும்.
- பணியாளர்களை தேர்வு செய்வதில் தேசிய அளவில் தனி நிறுவனம்.
- பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.3.5லட்சம் கோடி மூலதனம் .