December 6, 2025, 6:09 AM
23.8 C
Chennai

சமுதாய புரட்சிக்காக குரல் கொடுத்த சந்த் ரவிதாஸ் பிறந்த தினம் இன்று…

sant ravidass - 2025

பிப்ரவரி 9 – சந்த் ரவிதாஸ் பிறந்த நாள். சமுதாய புரட்சிக்காக குரல் கொடுத்தவர் சந்த் ரவிதாஸ்.

இந்தியாவின் தத்துவ புரட்சியில் பக்தி கவிஞர்களின் பங்கு அதிகம். கபீர்தாஸ், ரவிதாஸ் போன்றோரிடம் இருந்து அம்பேத்கர் போன்றோர் ஊக்கம் பெற்றார்கள்.

ரவிதாஸ் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை விரும்பினார். மனிதாபிமான சுகந்தத்தை பரப்பும் கவிதை மலர்களை படைத்தார். மனிதத்தன்மையை நிலைநாட்டுவதில் குலம் மதம் போன்றவை குறுக்குச் சுவராக நிற்கக்கூடாது என்று எச்சரித்தார்.

தாம் வாழும் காலத்தில் பலரையும் தம் கருத்துக்களால் தாக்கம் ஏற்படுத்தி முன்னேற்றப்பாதையில் செலுத்துபவர்களே வரலாற்றுத் திருப்பங்களில் நின்று வருங்கால சந்ததிக்கு வழிகாட்டுபவர்கள். அப்படிப்பட்டவர்களுள் சந்த் ரவிதாஸ் ஒருவர்.

அதனால்தான் அவருடைய தொண்டர்கள் ரவிதாசின் தங்கச் சிலையை ஜலந்தரில் இருந்து காசி வரை சுமந்து வந்தார்கள். தற்போது அவருடைய கருத்துக்களின் தாக்கம் பஞ்சாப் முதல் நாடெங்கும் பரவி உள்ளது.

ரவிதாஸ் தன் கவிதைகளில் ஆன்மிகத்தை மட்டுமின்றி சமுதாய கருத்துக்களையும் பாடியுள்ளார். அடிமை தன்மையை எதிர்த்தார். மனதாலோ உடலாலோ குலம் மதம் மூலமாகவோ பிறருக்கு அடிமையாகாமல் மனிதன் சுதந்திரமான எண்ணங்களுடன் சுய கௌரவத்துடன் வாழ வேண்டும். தலை குனிந்தவாறு வாழ வேண்டாம் என்று கவிதைகள் மூலம் எடுத்துரைத்தார். தொழிலாளிகளையும் தலித்துகளையும் கடைநிலை மக்களையும் புரட்சி கவிஞர்கள் மிகவும் கவர்ந்தனர்.

சந்த் ரவிதாஸ் 1450 பனாரசில் பிறந்து 1520 வரை வாழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ரவிதாஸ் கபீருடைய சமகாலத்தவர் என்று கருதப்படுகிறார். மீராபாய் ரவிதாசரின் ஆதரவாளராக இருந்தார் என்று தெரிகிறது. ரவிதாஸ் தோல் பதனிடும் தொழில் செய்து வந்தார். அவருக்கு காசி மகாராஜாவும் மகாராணியும் கூட சீடர்களானார்கள்.

பௌத்த தம்ம சூத்திரத்தின் சித்தாந்த சாரம் அனைத்தும் ரவிதாஸன் கவிதைகளில் காணப்படுகின்றன!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories