சமுதாய புரட்சிக்காக குரல் கொடுத்த சந்த் ரவிதாஸ் பிறந்த தினம் இன்று…

Published:

sant ravidass - 2026

பிப்ரவரி 9 – சந்த் ரவிதாஸ் பிறந்த நாள். சமுதாய புரட்சிக்காக குரல் கொடுத்தவர் சந்த் ரவிதாஸ்.

இந்தியாவின் தத்துவ புரட்சியில் பக்தி கவிஞர்களின் பங்கு அதிகம். கபீர்தாஸ், ரவிதாஸ் போன்றோரிடம் இருந்து அம்பேத்கர் போன்றோர் ஊக்கம் பெற்றார்கள்.

ரவிதாஸ் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை விரும்பினார். மனிதாபிமான சுகந்தத்தை பரப்பும் கவிதை மலர்களை படைத்தார். மனிதத்தன்மையை நிலைநாட்டுவதில் குலம் மதம் போன்றவை குறுக்குச் சுவராக நிற்கக்கூடாது என்று எச்சரித்தார்.

தாம் வாழும் காலத்தில் பலரையும் தம் கருத்துக்களால் தாக்கம் ஏற்படுத்தி முன்னேற்றப்பாதையில் செலுத்துபவர்களே வரலாற்றுத் திருப்பங்களில் நின்று வருங்கால சந்ததிக்கு வழிகாட்டுபவர்கள். அப்படிப்பட்டவர்களுள் சந்த் ரவிதாஸ் ஒருவர்.

அதனால்தான் அவருடைய தொண்டர்கள் ரவிதாசின் தங்கச் சிலையை ஜலந்தரில் இருந்து காசி வரை சுமந்து வந்தார்கள். தற்போது அவருடைய கருத்துக்களின் தாக்கம் பஞ்சாப் முதல் நாடெங்கும் பரவி உள்ளது.

ரவிதாஸ் தன் கவிதைகளில் ஆன்மிகத்தை மட்டுமின்றி சமுதாய கருத்துக்களையும் பாடியுள்ளார். அடிமை தன்மையை எதிர்த்தார். மனதாலோ உடலாலோ குலம் மதம் மூலமாகவோ பிறருக்கு அடிமையாகாமல் மனிதன் சுதந்திரமான எண்ணங்களுடன் சுய கௌரவத்துடன் வாழ வேண்டும். தலை குனிந்தவாறு வாழ வேண்டாம் என்று கவிதைகள் மூலம் எடுத்துரைத்தார். தொழிலாளிகளையும் தலித்துகளையும் கடைநிலை மக்களையும் புரட்சி கவிஞர்கள் மிகவும் கவர்ந்தனர்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

சந்த் ரவிதாஸ் 1450 பனாரசில் பிறந்து 1520 வரை வாழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ரவிதாஸ் கபீருடைய சமகாலத்தவர் என்று கருதப்படுகிறார். மீராபாய் ரவிதாசரின் ஆதரவாளராக இருந்தார் என்று தெரிகிறது. ரவிதாஸ் தோல் பதனிடும் தொழில் செய்து வந்தார். அவருக்கு காசி மகாராஜாவும் மகாராணியும் கூட சீடர்களானார்கள்.

பௌத்த தம்ம சூத்திரத்தின் சித்தாந்த சாரம் அனைத்தும் ரவிதாஸன் கவிதைகளில் காணப்படுகின்றன!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img