ஜம்மு காஷ்மீரில் எல்லைப் புறநகரமான மெந்தாரில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு – காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேக்வார் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த 8-ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி பீரங்கி தாக்குதல் நடத்தினர்.
பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற அவர்களுக்கு, ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த சண்டையில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் எல்லைப் புறநகரமான மெந்தாரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மெந்தார் உள்பட எல்லைப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக இந்திய -பாகிஸ்தான் படைகள் இடையே சண்டை நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.