நினைவிடம் வேண்டாம்; நினைவாக மரங்களை நடுங்கள்: அனில் மாதவ் தவே உருக்கம்!

Published:

anil madhav dave - 2026

புது தில்லி:

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவர் தனது நினைவாக மரங்களை நடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். 60 வயதான அவர், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மோடி அமைச்சரவையில் சென்ற வருடம் தான் சேர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பு வகித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டு சென்றது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, உடனடியாக சட்டம் நிறைவேற அனில் மாதவ் தவே உறுதுணையாகவும் ஆர்வமாகவும் செயல்பட்டார்.

இந்நிலையில் தவே, 2012-ஆம் ஆண்டு எழுதப்பட்ட உயில் குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது. தன் உடல் நர்மதா ஆற்றங்கரையில் எரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், ‘என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் இருந்தால், எனக்காக எந்த இடத்திலும் நினைவிடம் எழுப்ப வேண்டாம்; அதற்கு பதில், ஒரு மரம் நடுங்கள் போதும்.’ என்று உயிலில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவரம் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் கனத்த மனத்துடன் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். தவே, ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img