பெண்களே இயக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்! மகளிர் தின ஸ்பெஷல்!

Published:

train fully ladies3 - 2026

எங்களுக்கு நிகர் யாருமில்லை… என்றனர்.
பெண்களுக்கு இணை யாருமில்லை…
கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் ரயிலை நடத்திய பெண் ஊழியர்கள்.
ரயிலில் அனைத்து பணிகளிலும் பெண்களே!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி விஜயவாடா டிவிஷனில் அரிதான பெருமை.

ஆண்களுக்குச் சமமாக திறமையோடு பணிகளைச் செய்துகொண்டு எங்களுக்கு நிகர் யாருமில்லை என்று நிரூபித்து வருகிறார்கள் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் பணிபுரியும் மகளிர் ஊழியர்கள்.

train fully ladies1 - 2026

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சவுத் சென்ட்ரல் ரயில்வே விஜயவாடா டிவிஷனில் இந்த மாதம் 1 முதல் 10ம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

அவற்றில் ஒரு பகுதியாக விஜயவாடா டிவிஷனில் முதல் முறையாக முழுமையாக மகளிர் ஊழியர்களோடு அதிலாபாதிலிருந்து திருப்பதி செல்லும் கிருஷ்ணா எக்ஸ்பிரஸ் 17406 ரயிலை நடத்தினார்கள்.

வெள்ளிக்கிழமை விஜயவாடாவில் ஊழியர்கள் பணி மாறினார்கள். லோகோ பைலட், கார்டு, டிடிஓ, ஸ்குவாட், ஆர்பிஎஸ் ஊழியர், பாயிண்ட் உமன், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பிற பிரிவுகளில் முழுமையாக மகளிர் ஊழியர்களே பணிபுரிந்தார்கள்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
train fully ladies - 2026

இந்த ரயில்வே பணிகளில் பங்கு பெற்ற லோகோ பைலட் சாந்தி, கார்டு ஆர். ராதா, ஆர்பிஎஃப் ஹெட் கான்ஸ்டபுள்கள் எஸ். ஷ்யாமளா, எஸ்.சிவகுமாரி, தனகுமாரி, சிடிஐகள் கே. கிருஷ்ணவேணி, உமாமகேஸ்வரி, அருணா குமாரி, நாகலட்சுமி, சந்து ராதிகா, கே.எல் பிரசன்னா போன்றவர்களை டிஆர்எஸ் பி. ஸ்ரீனிவாஸ் பாராட்டிப் பேசினார்.

விஜயவாடா டிவிஷனில் முதல் முறையாக இந்த அரிதான கௌரவத்தை சாதித்தது தமக்கு பெருமையாக உள்ளது என்று தெரிவித்தார். மகளிர் ஊழியர்கள் ஆண்களுக்கு சமமாக பணிகளில் திறமையை காட்டி வருகிறார்கள் என்று பாராட்டினார்.

train fully ladies2 - 2026

விஜயவாடா ரயில்வே பிஆர்ஓ நஸ்ரத் எம். மண்ட்ரூப்கர், எஸ்எம் சுனைனா, பாயிண்ட்ஸ் உமன் நஜ்மா விஜயவாடாவில் கொடியசைத்து எக்ஸ்பிரஸ் ரயிலை ஆரம்பித்து வைத்தனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img