
புது தில்லி:
இந்திய சீன எல்லையில் அஸாம் மாநிலப் பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சுகோய் – 30 ரக விமானம், திடீரென ரேடார் உடனான தொடர்பை இழந்து மாயமானது.
இன்று காலை 9.30க்கு அசாம் மாநிலம் தேஜ்பூர் படைத் தளத்திலிருந்து இரண்டு விமானிகளுடன் சுகோய் – 30 ரக விமானம் பறக்கத் தொடங்கியது. தேஜ்பூரிலிருந்து 60 கி.மீ., தொலைவில் பறந்து கொண்டிருந்த போது, இந்த விமானம் ரேடாரின் தொடர்பை இழந்தது. இந்த இடமானது ஏற்கெனவே சர்ச்சைக்குரிய இந்திய – சீன எல்லைப் பகுதி என்பதால், மாயமான விமானம் விபத்துக்குள்ளானதா அல்லது வேறு ஏதும் சதி வேலை காரணமா என விமானப் படையினர் தேடுதல் வேட்டையைத் துவக்கியுள்ளனர். மேலும், இந்த எல்லைக்கோட்டுக்கு அருகில் சீனா விமானப் படை தளமும் இருப்பதால், அந்நாட்டு ரேடார் சிக்னல்களால் சுகோய் – 30 ரக விமானம் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.


