மும்பை: மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பிலேயே வெளியிடுங்கள் என்று கோரினார். மேக் இன் இந்தியா திட்டத்தில் மை, தாள் உள்ளிட்டவை இந்தியத் தயாரிப்பிலேயே இருக்க வழி செய்யுங்கள் என்றார். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் நீடிக்கச் செய்ய பல சிறந்த திட்டங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வகுத்துள்ளார். அவரது செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. பொருளாதார நிலவரம் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் பல கருத்தொற்றுமைகள் உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம் என்றார். மேலும், இந்திய காகிதங்கள், மை ஆகியவற்றைக் கொண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, இன்றைய நாளில் நாம் ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அந்த நாளில், நாம் அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் காகிதங்களும், மையும் இந்தியத் தயாரிப்புகளாக இருக்க வேண்டும். சுதேசி இயக்கத்துக்காகப் போராடிய காந்தியின் புகைப்படம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காகிதங்களில் அச்சடிக்கப்படுவது முரண்பாடான விஷயமாகும். இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை, ரூபாய்நோட்டுகளில் இருந்து தொடங்க வேண்டும் என்றார் மோடி.
ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பில் வெளியிடுங்கள்: மோடி கோரிக்கை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari