பனாஜி: கோவாவில் துணிக்கடை ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்றார். அப்போது அந்தக் கடையின் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவா தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கலங்குட்டே கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவா வந்தார் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி. அப்போது, அவர் அந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஃபேப் இண்டியா – ரெடிமெட் ஷோரூமில் துணிகள் வாங்கினார். பின்னர் உடை மாற்றும் அறைக்குச் சென்று, உடையின் அளவை சரிபார்க்க முயன்றார். அப்போது அங்கு வெளிப் பார்வைக்குப் புலப்படாத வகையில், கேமிரா ஒன்று இருந்ததைக் கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ மைக்கேல் லோபோவிடம் தகவல் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ மைக்கேல் லோபா போலீசில் புகார் அளித்ததால், கோவா மாநில போலீசார், அந்தக் கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், கடைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். அமைச்சர் ஒருவரே ரகசியமாக கண்காணிக்கப்படவிருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துணிக்கடை உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: ஸ்மிருதி இராணி அதிர்ச்சி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari