ஓபிஎஸ் இபிஎஸ்., அணிகள்…. கூட்டுறவுத் தேர்தல்லியே சட்டைய பிச்சிக்கிட்டாய்ங்க…!

edappadi panneerselvam - 2026

திருமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் மற்றும் துணைத் தேர்வுக்கான தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் மீண்டும் மோதிக் கொண்டனர். அப்போது, வாக்குச்சீட்டுகள் கிழித்து எறியப் பட்டன. ஓட்டுப் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் அணியினர் சாலை மறியலில் இறங்கினர். தாங்கள் ஒதுக்கப்படுவதாக அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறிய ஓபிஎஸ் அணியினரால், தேர்தல் நடைபெறவில்லை; இந்தக் களேபரத்தைக் கண்டு அதிகாரிகள் தப்பி ஓடினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க கட்டிட வங்கி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இன்று நடைபெற இருந்த தேர்தலில் வங்கியின் உள்ளே ஓட்டுப் பெட்டி மற்றும் வாக்குச்சீட்டுகளை கிழித்தெறிந்து அராஜகம் செய்ததால், தேர்தல் அதிகாரிகள் தப்பி ஓடிவிட்டனர்,

தேர்தல் நடைபெறாததால் ஓபிஎஸ் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், திருமங்கலம் தொகுதியில் ஓபிஎஸ் அணியினர் ஒதுக்கப்படுவதாக அமைச்சர் மீது குற்றம் சாட்டினர்.

திருமங்கலம் கூட்டுறவு வீட்டு வசதி கட்டிட சங்க வங்கிக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 11 நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அழகர் தலைமையில் 4 பேர் எடப்பாடி அணியிலும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் 7பேர் ஓபிஎஸ் அணியிலும் களத்தில் இருந்தனர்

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

கடந்த 21ம் தேதி தலைவருக்கான தேர்தல் ஓ பி எஸ் அணியைச் சேர்ந்த நிரஞ்சன் தன்னுடைய அண்ணன் திமுக நகர பொறுப்பாளர் முருகன் பிரச்சினை செய்ததால் அன்று தேர்தல் 24ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது

இந்நிலையில் இன்று தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது மேலும் உச்சநீதிமன்ற படி இன்று தேர்தல் நடைபெறும் என சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது

இன்று காலை முதல் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணியில் இடையே யார் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்த பிரச்னை உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் நடைபெற இருந்த 12 மணிக்கு பாதுகாப்பில் இருந்த பாதி போலீசார் விலக்கிக் கொள்ளப்பட்டனர்

இந்நிலையில் வங்கியை பூட்டிவிட்டு வங்கிக்குள் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதில் எடப்பாடி அணியைச் சேர்ந்த அழகர் தலைமையில் ஆதரவாளர்கள் வாக்குச்சீட்டுகளை கிழித்து ஓட்டுப் பெட்டியை தூக்கி எறிந்தனர். இதனால் தேர்தல் அதிகாரி கண்ணன் பின்வாசல் வழியாக தப்பி ஓடி விட்டார். பின்னர் வங்கி கதவை வங்கி ஊழியர்கள் அடைத்துவிட்டுச்சென்றனர்

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப் படவில்லை. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் நகரமன்ற தலைவர் நிரஞ்சன் தன்னுடைய ஆதரவாளர்களுடன் திருமங்கலம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருமங்கலம் தொகுதியில் ஒட்டுமொத்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் ஒதுக்கப்படுவதாகவும் அமைச்சர் உதயகுமார் இருப்பதால் அதிமுகவினர் இடையே மோதல் உருவாகும் நிலை உள்ளது எனவும் குற்றம் சாட்டினர்

சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் அணியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் முற்றிலும் ஓபிஎஸ் அணியை புறக்கணிப்பதால் கட்சி உடையும் சூழல் ஏற்படுவதாக ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories