கொரோனா: விடிய விடிய கணவர் உடலோடு சாலையில் காத்திருந்த மனைவி! அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு!

thukku 4
thukku 4

ஆந்திராவில் உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட கணவரின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், செய்வதறியாது சாலையில் கணவரின் உடலுடன் விடிய விடிய அவரது மனைவி மற்றும் மகன் அழுதபடி காத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா அருகே உள்ள மோபிதேவி லங்கா கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடேஸ்வர ராவ் (42). இவருக்கு நாகலதா என்கிற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஸ்வரராவின் குடும்பம், பிழைப்பு தேடி கிருஷ்ணா மாவட்டம், பெத்த புலிபாக்கா கிராமத்திற்கு சென்றனர். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் வெங்கடேஸ்வரராவ் கடந்த செவ்வாய்க் கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெங்கடேஸ்வரராவின் உடலை ஒரு ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வந்தார் நாகலதா. ஆனால், அங்கு உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் தற்கொலை செய்து கொண்டவரின் உடலை அடக்கம் செய்யக் கூடாது என உறவினர்கள் திட்ட வட்டமாக கூறிவிட்டனர்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

இதைத் தொடர்ந்து, ஆம்பு லன்ஸ் ஊழியர்கள் உடலை சாலையில் இறக்கி வைத்து விட்டு சென்றுவிட்டனர். அப்போது என்ன செய்வதென்று தெரியாமல் தனது கணவரின் உடலுடன் நாகலதா விடிய விடிய அழுதபடி உட்கார்ந் திருந்தார். உடன் அவரது மகனும் அழுது கொண்டிருந்தார்.

இதுகுறித்து கிராம வருவாய் அலுவலர், போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் அங்கு சென்ற போலீஸார் நாகல தாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர், வெங்கடேஸ்வரராவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்ய அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். கொரோனா தொற்று இருக்கும் கிராமத்தில் உடலை அடக்கம் செய்யவிடாமல் கிராமத்தை விட்டு விரட்டிய சம்பவம் மனிதாபிமானத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories