ஊரடங்கு: சொந்த ஊர் செல்ல உதவிய வெங்காயம்!

onion 1

மகாராஷ்டிராவில் மும்பையின் அந்தேரி கிழக்கில் ஆசாத் நகரில் வசித்து வருபவர் பிரேம் மூர்த்தி பாண்டே. இவர் மும்பை விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். முதல்கட்ட லாக்டவுன் சமயத்தில் அவர் மும்பையில் இருந்தார்.

லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் என தெரிந்தவுடன் உத்தரபிரதேசம் பிரயாக்ராஜின் (அலகாபாத்) புறநகரில் உள்ள தனது குடும்பத்தினர் கிராமத்துக்கு செல்ல முடிவு செய்தார். பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் எப்படி கிராமத்துக்கு செல்வது என்று தெரியாமல் திணறி வந்தார்.

இந்நிலையில், சரக்கு வாகனம் மூலம் அந்த கிராமத்திற்கு செல்ல முடிவு எடுத்தார். அதாவது, அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தடை இல்லை என அரசு கூறியுள்ளதால் அதனை பின்பற்ற திட்டம்போட்டார்.

முதலில் நாசிக் அருகே உள்ள பிம்பால்கான் செல்வதற்காக மினி லாரி ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். லாரியில் அங்கு சென்று ரூ.10 ஆயிரத்துக்கு வாட்டர்மேலன் வாங்கினார். பின் அங்கியிருந்து மும்பைக்கு திரும்பி ஏற்கனவே பேசி வைத்திருந்த ஒரு வர்த்தகரிடம் அதனை விற்பனை செய்தார்.

onion lory

பின் பிம்பால்கான் சந்தையில் கிலோ ரூ.9.10 என்ற விலைக்கு 25,520 கிலோ வெங்காயத்தை வாங்கினார். பின் அங்கியிருந்து வெங்காயத்துடன் 1,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிரய்கராஜ் செல்ல ரூ.77,500 வாடகையில் லாரி ஒன்றை அமர்த்தினார். கடந்த 20ஆம் தேதி வெங்காயத்துடன் லாரியில் கிளம்பிய பிரேம் 23ஆம் தேதி பிரயக்ராஜ் சென்றடைந்தார்.

அந்நகரின் புறநகரில் உள்ள முண்டேரா மொத்த சந்தைக்கு சென்று வெங்காயத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தார் ஆனால் பணத்தை கொடுத்தும் வாங்கும் நபர்களை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து அருகில் உள்ள தனது கிராமமான கோட்வா முபர்க்பூருக்கு லாரியில் கொண்டு சென்று அங்கு வெங்காயத்தை இறக்கி வைத்தார். பின் கடந்தவெள்ளிக்கிழமையன்று அந்த பகுதியில் உள்ள காவல் நிலையம் சென்றார். அதன்பிறகு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழு வீட்டில் தனிமைப்படுத்திகொள்ளும்படி அறிவுறுத்தியது.

சொந்த ஊருக்கு செல்வதற்காக பிரேம் மூர்த்தி பாண்டே மேற்கொண்ட இந்த முயற்சி மகாராஷ்டிரா, உ.பி.யில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories