கிளவுஸ் இல்லை பிரசவம் பார்க்க முடியாது: ஆரம்ப சுகாதார ஊழியர்! குழந்தை உயிரிழந்த சோகம்!

cloves

கிளவுஸ் இல்லாத காரணத்தால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்துள்ளார் ஆரம்ப சுகாதார அமைப்பின் பெண் ஊழியர் ஒருவர்.

ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் மற்றும் குத்தி தேவி. குத்தி தேவி கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 18ம் தேதி இரவு 9.30 மணி அளவில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் குத்தி தேவியை அனில் குமார் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு, குத்தி தேவியை பரிசோதனை செய்த பெண் ஊழியர், இருவரையும் அடுத்த நாள் காலை வரச்சொல்லியுள்ளார். ஆனால், குத்தி தேவிக்கு வலி அதிகரித்துக்கொண்டே போயுள்ளது.

அதனை அடுத்து, அனில் குமார் அந்த ஊழியர்களிடம் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்தது மட்டுமல்லாமல் அனில் குமாரை வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனாலும் மனைவி பிரசவ வலியால் துடிப்பதை பார்த்த அனில் குமார் அவர்களிடம் சிகிச்சை அளிக்குமாறு தொடர்ந்து கேட்டுள்ளார்.

baby 1
baby 1

இறுதியாக சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், அங்கு கிளவுஸ் இல்லாததாக் அனிலை அனுப்பி சர்ஜிக்கல் கிளவுஸ் வாங்கிவருமாறு கூறியுள்ளனர். ஆனால், ஊரடங்கு காரணமாக கிளவுஸ் எங்கும் கிடைக்கவில்லை.

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

கிளவுஸ் இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்துவிட்டனர் ஆரம்ப சுகாதார ஊழியர்கள். அவர்களிடமான நீண்ட போராட்டத்திற்கு பிறகு குத்தி தேவியும் அனில் குமாரும் வீட்டிற்கு திரும்பிவிட்டனர்.

ஆனால், காலை சுமார் 3 மணி அளவில் குத்தி தேவி மயக்கமடையவே, தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார் அனில் குமார். குத்தி தேவிக்கு ஸ்கேன் செய்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வயிற்றின் உள்ளேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மீது அனில் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories