
காஷ்மீர் சகோதரர்களைக் கொன்ற இந்திய ராணுவ அதிகாரிகளைப் பழி வாங்குவோம்; எங்கள் அடுத்த இலக்கு அவர்கள்தான் என்று அல் காய்தா பயங்கரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பான ஆவணம் ஒன்றை அல் கொய்தா வெளியிட்டுள்ளது. அதில், அல் காய்தாவிற்கு எதிராக செயல்பட்ட ராணுவ வீரர்கள் அனைவரும் தங்கள் தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்திய பாதுகாப்புப் படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும் தங்கள் குறியில் இருந்து தப்ப முடியாது என்று அதில் மிரட்டல் விடுக்கப்படுள்ளது.
தங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காஷ்மீர் சகோதரர்களை இந்திய ராணுவம் கொன்றுள்ளதால், அவர்களைப் பழி வாங்குவோம் எனவும் அல் காய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்து, முஸ்லீம், புத்த மத வழிபாட்டு தலங்கள், மக்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று அதில் அல்காய்தா தெரிவித்துள்ளது.



