ரூ. 2 கோடி புகார் 2 பேரையும் 2 கோடிக்கு தொரத்தி விட்ருச்சி!

DIG Rupa SASIKALA - 2026

சசிகலாவுக்கு சலுகை காட்ட ரூ.2 கோடி புகார்: சிறைத்துறை அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம்…

பெங்களூர்:

கர்நாடகத்தில் சிறைக் கைதியாக உள்ள சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய டி.ஐ.ஜி., ரூபாவையும், டிஜிபி சத்யநாராயணாவையும் பணியிட மாற்றம் செய்தது கர்நாடக அரசு.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா சிறைவாசத்தை சுகபோகத்துடன் அனுபவிக்க ரூ.2 கோடி லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டு இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்தப் புகார் குறித்து விசாரிக்க, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ள நிலையில், இன்னும் விசாரணையே துவங்கப்படாத நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

முன்னதாக, பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் முறைகேடுகளை ரூபாவிடம் சொன்ன கைதிகள், பெல்ஹாம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, சீருடை அணியாத காவலர்களால் முரட்டுத் தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதிகள் போலீஸ் வாகனத்தில் வேறு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் வெகு நேரம் கழித்து, வாகனத்தில் இருந்து இறங்கி செல்லும்போதும் நடக்கமுடியாமல் நடந்து சென்றதும், கடுமையாக தாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கைதிகள் வெளியேறிய அரை மணி நேரத்தில், சிறை அறையில் இருந்து சீருடை அணியாமல் மஃப்டியில் உள்ள போலீஸார் கைகளில் லத்திகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு வெளியே வருவதும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளியான உடன், ரூபாவுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக, சிறைக் கைதிகளை பலமாகத் தாக்கியுள்ளது தெரியவந்ததால், கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு எழுந்தது. இதனிடையே ஏடிஜிபி சத்யநாராயணாவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறைக்கு ஏஎஸ் என் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories