ரூ. 2 கோடி புகார் 2 பேரையும் 2 கோடிக்கு தொரத்தி விட்ருச்சி!

DIG Rupa SASIKALA - 2026

சசிகலாவுக்கு சலுகை காட்ட ரூ.2 கோடி புகார்: சிறைத்துறை அதிகாரிகள் இருவரும் பணியிட மாற்றம்…

பெங்களூர்:

கர்நாடகத்தில் சிறைக் கைதியாக உள்ள சசிகலா சிறையில் சலுகை பெற ரூ.2 கோடி லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய டி.ஐ.ஜி., ரூபாவையும், டிஜிபி சத்யநாராயணாவையும் பணியிட மாற்றம் செய்தது கர்நாடக அரசு.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா சிறைவாசத்தை சுகபோகத்துடன் அனுபவிக்க ரூ.2 கோடி லஞ்சம் அளித்துள்ளதாக குற்றம் சாட்டிய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சமையலறை அமைக்கப்பட்டு இரண்டு தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். சிறைத்துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் தான் இந்த பணத்தை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்தப் புகார் குறித்து விசாரிக்க, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ள நிலையில், இன்னும் விசாரணையே துவங்கப்படாத நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா, பெங்களூரு நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

முன்னதாக, பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் முறைகேடுகளை ரூபாவிடம் சொன்ன கைதிகள், பெல்ஹாம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு, சீருடை அணியாத காவலர்களால் முரட்டுத் தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. கைதிகள் போலீஸ் வாகனத்தில் வேறு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அவர்கள் வெகு நேரம் கழித்து, வாகனத்தில் இருந்து இறங்கி செல்லும்போதும் நடக்கமுடியாமல் நடந்து சென்றதும், கடுமையாக தாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கைதிகள் வெளியேறிய அரை மணி நேரத்தில், சிறை அறையில் இருந்து சீருடை அணியாமல் மஃப்டியில் உள்ள போலீஸார் கைகளில் லத்திகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு வெளியே வருவதும் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளியான உடன், ரூபாவுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக, சிறைக் கைதிகளை பலமாகத் தாக்கியுள்ளது தெரியவந்ததால், கர்நாடகத்தில் பெரும் பரபரப்பு எழுந்தது. இதனிடையே ஏடிஜிபி சத்யநாராயணாவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சிறைத்துறைக்கு ஏஎஸ் என் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories