கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பிரபல கிரிக்கெட் வீரரின் மாமா மரணம்!

suresh raina

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின், மாமாவை கொள்ளையடிக்க வந்த கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

அவருடைய அத்தை கவலைக்கிடமாக இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா. இவருடைய மாமா அசோக் குமார். பஞ்சாப் மாநிலம், பதன்கோட் மாவட்டத்தில் உள்ள தரியால் கிராமத்தில் வசித்து வந்தார்.

அரசுப் பணி ஒப்பந்ததாரர். கடந்த 19ம் தேதி இரவு அசோக் குமாரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டில் இருந்த நகைகள், பணத்தை கொள்ளையடித்தது.

அதை தடுக்க வந்த அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது கொள்ளையர்கள் கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த அசோக் குமார், அன்றிரவே உயிரிழந்தார். அவரது 80 வயதான தாய், மனைவி ஆஷாதேவி மற்றும் மகன்கள் அபின், கவுசல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

ashok kumar - 2026

இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஷாதேவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொள்ளையர்களால் அசோக் குமார் கொல்லப்பட்ட தகவல், ஒரு வாரத்துக்குப் பிறகு இப்போதுதான் தெரிய வருகிறது. இதற்கான காரணம் கூறப்படவில்லை. இந்த கொலை, கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக சுரேஷ் ரெய்னா சென்றிருந்தார். சமீபத்தில்தான், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பை டோனி அறிவித்த அன்றே வெளியிட்டார்.

இந்நிலையில், நேற்று காலை துபாயில் இருந்து சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புவதாக அறிவித்த ரெய்னா. உடனடியாக இந்தியா புறப்பட்டார்.

தனது மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகதான் அவர் அவசரமாக திரும்பியதாக கருதப்படுகிறது. கிரிக்கெட் வீரரின் உறவினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories