பவன் கல்யாண் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பி வரும் வழியில்…. சோகம்!

Published:

bhavan-birthday-party
bhavan-birthday-party

வாரங்கல் ரூரல் மாவட்டத்தில் கோரமான சாலை விபத்து நேர்ந்தது. லாரியும் காரும் மோதிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

புதன்கிழமை விடியற்காலையில் தாமெர மண்டலம் பசரகொண்டா கிராஸ் ரோட்டில் லாரி டிரைவர் தூக்க கலக்கத்தில் எதிரில் வந்த காரை மோதினார். அதனால் கார் நசுங்கித் தூளாகியது.

காரில் இருந்த மேகல பிரவீன், மேகல ராஜேஷ், மேடி பவன், ரோஹித், ரஹீம் ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திரைப்பட ஹீரோ பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பார்ட்டியில் பங்கு கொண்டு திரும்பி வரும் வழியில் இந்த விபத்து நேர்ந்தது.

செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் 22 லிருந்து 26 வயதுக்குள் இருப்பவர்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img