கொரோனா: ஆபத்தான கட்டத்தில் மருந்தை செலுத்த ஆலோசனை!

corona vaccine

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலகம் முழுவதும் நடந்து வருகிறது. பல நாடுகள் மருந்தை கண்டுபிடித்து சோதனை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவும் மருந்தை உருவாக்கி சோதனை நடத்தி வருகிறது. ஆனாலும், இதுவரை கொரோனாவுக்கு சரியான தடுப்பு மருந்தை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இன்னும் சில மாதங்களில் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்த்தன் கூறும் போது, இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் மருந்து பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று கூறினார். பொதுவாக தடுப்பு மருந்துகளை மனிதனுக்கு செலுத்தி 3 கட்ட சோதனை நடத்த வேண்டும்.

அனைத்து சோதனையும் வெற்றிகரமாக அமைந்து அதற்கு மருந்து கட்டுப்பாடு அமைப்புகள் அனுமதி அளித்தால் தான் பயன்படுத்த முடியும்.

ஆனால், பல மருந்துகள் 1-ம், 2-ம் கட்ட சோதனைகளில் வெற்றி அடைந்துள்ளது. 3-ம் கட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன. கொரோனா நோய் கடுமையாக தாக்கிய பல நபர்கள் உயிர் இழந்து வருகிறார்கள்.

அதிக வயதானவர்களும் உயிர் இழக்கிறார்கள். எனவே, உயிர் இழப்பு தவிர்க்க முடியாது என்ற ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முழுமையான சோதனை முடியாத தடுப்பு மருந்துகளை வழங்கலாமா? என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் கூறினார்.

இதுபற்றி விரிவாக ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் இது போல் முழுமையாக ஆய்வு முடிக்கப்படாத மருந்துகளை ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு வழங்குவது என முடிவு செய்துள்ளனர்.

அதை இந்தியாவிலும் பின்பற்றலாம் என்ற எண்ணத்துடன் இந்த ஆலோசனை நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories