திருப்பதி தேவஸ்தான ஈஓ., அனில்குமார் இடமாற்றம்!

Published:

ttd-official-transfer
ttd-official-transfer
  • திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஈவோ அனில்குமார் சிங்கல் பணிமாற்றம்.
  • இன்சார்ஜாக தர்மாரெட்டிக்கு பொறுப்புகள்.

திருமலா திருப்பதி தேவஸ்தானம் எக்சீக்யூடிவ் ஆபீசர் அனில்குமார் சிங்கலை ஆந்திர பிரதேச அரசாங்கம் பணி மாற்றம் செய்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ ஆரோக்கிய துறை பிரதான காரியதரிசியாக நியமித்துள்ளது. இதன்படி புதன்கிழமை அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

2017 மே முதல் டிடிடி ஈவோ வாக அனில்குமார் சிங்கல் பொறுப்பு நிறைவேற்றி வந்துள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார்.

டிடிடி அடிஷனல் ஈவோவாக உள்ள தர்மாரெட்டிக்கு டிடிடி முழு அதிகப்படியான பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது. தாற்காலிகமாக தர்மாரெட்டி பொறுப்புகளை நிர்வகிப்பார்.

புதிய ஈவோ. வாக ஜவஹர் ரெட்டியை நியமிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது அவர் மருத்துவ ஆரோக்கியத்துறை பிரத்தியேக பிரதான காரியதரிசியாக உள்ளார். இதன்படி சிங்கல் மருத்துவ ஆரோக்கியத்துக்கு செல்வதால், டிடிடி ஈவோவாக ஜவக்ஹர்ரெட்டி செல்ல உள்ளார்.

தன்னை டிடிடி ஈவோ ஆக நியமிக்க வேண்டும் என்று ஜவஹர்ரெட்டி கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

1993 ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த அனில்குமார் சிறந்த அதிகாரியாக பெயர் வாங்கியவர். ஆனால் அவரை டிடிடி ஈவோ வாக நியமித்த போது விமர்சனங்கள் வெளிவந்தன. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் அப்போதைய அரசாங்கம் அவரை நியமித்தது.

அதன்பின் ஒய்சிபி அரசாங்கம் அதிகாரத்தை கைப்பற்றியது. ஒன்றரை ஆண்டுகளாக சிங்கல் ஈவோவாக பணிபுரிந்து வருகிறார். ஆனால் திடீரென்று பணி மாற்றம் செய்வது சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.

ஜவஹர்ரெட்டி கேட்டார் என்பதற்காக பணிமாற்றம் செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளை மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் இருத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img