December 6, 2025, 4:23 AM
24.9 C
Chennai

கணெக்கெடுக்க சென்ற பெண் வனக்காவலரை கொன்ற புலி!

tiger
tiger

புலிகள் கணக்கெடுப்பு பணியின்போது அடர்ந்த காட்டுக்குள் சென்ற ஒரு புலியை பின்தொடர்ந்து கண்காணித்த பெண் வனக்காவலர் மீது பாய்ந்து கடித்து கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு கோலாரா வனச்சரகத்தில் சுவாதி துமனே என்பவர் வனக்காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

சுவாதி துமனே நேற்று காலையில் ஏழு மணி அளவில் மூன்று உதவியாளர்களுடன் கோலாரா வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கியிருக்கிறார்.

கோலாரா கேட்டில் இருந்து 4 கிலோமீட்டர் வரை காட்டின் மையப்பகுதிக்கு சென்று இருக்கிறார்கள். அப்போது அங்குள்ள ஒரு சாலையில் பெண் புலி ஒன்று நிற்பதை குழுவினர் பார்த்துள்ளனர்.

அவர்கள் நின்ற இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் அந்த புலி நின்று கொண்டிருந்திருக்கிறது . அந்த புலி எங்கே போகிறது என்பதை கண்காணிக்க அரை மணி நேரம் வரைக்கும் அங்கேயே காத்திருந்து கண்காணித்து இருக்கிறார்கள். பின்னர் அந்த புலி அடர்ந்த காட்டுக்குள் சென்று இருக்கிறது .

அடர்ந்த காட்டுக்குள் இந்த புலி எங்கே செல்கிறது என்பதை கண்காணிக்க பின்தொடர்ந்து இருக்கிறார்கள். இதை கவனித்த புலி வனக்காவலர் சுவாதி துமனே மீது பாய்ந்து தாக்கி இருக்கிறது. உதவியாளர்கள் காப்பாற்ற முயற்சித்தும் பலனில்லாமல் போயிருக்கிறது.

அடர்ந்த வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றபின்னர் உதவியாளர்களின் முயற்சியில் சுவாதி துமனேயை சடலமாகத் தான் மீட்க முடிந்திருக்கிறது.

இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புலி தாக்கி உயிரிழந்த சுவாதி துமனே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் நடந்து சென்று புலிகள் கணக்கெடுக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கோலாரா புலிகள் காப்பக தலைமை வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories