December 6, 2025, 3:27 AM
24.9 C
Chennai

ஆன்லைன் ஷாப்பிங்: ஏமாறாமல் இருக்க.. இதெல்லாம் பண்ணுங்க!

online shop
online shop

இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் எல்லா வகையான பொருட்களையும் ஆன்லைன் மூலம் நம்மால் வாங்கி குவித்து விட முடியும். அதுவும் நாம் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் தள்ளுபடியையும் பெற முடிகிறது. இதற்காகவே பலர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கின்றனர்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக பலர் தவறான வெப்சைட்களில் சென்று தங்களது பணத்தை இழந்த கதைகளையும் கேட்டிருப்போம்.

பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் இந்த 5 விஷயங்களை அவசியம் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

உண்மைத் தன்மை : ஏராளமான தள்ளுபடிகள் உள்ளதே என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு உங்களின் பணத்தை போலியான வெப்சைட்களில் கொட்டி விடாதீர்கள்.

parcel
parcel

நீங்கள் ஷாப்பிங் செய்கின்ற வெப்சைட் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

மேலும் உங்களின் இமெயில் மற்றும் சமூக ஊடங்கங்களில் வருகின்ற ப்ரொமோஷனல் லிங்க்கை கிளிக் செய்யாதீர்கள். அவற்றில் பல, போலியான வெப்சைட்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இணையதளத்தின் டொமைன் : மிக பெரிய தள்ளுபடி போடப்படும் நாட்களில் ஹேக்கர்கள் நம்மை ஏமாற்றுவதற்காக காத்திருப்பார்கள்.

அசல் வெப்சைட்டை போன்றே போலியான ஒன்றை தயார் செய்திருப்பார்கள். நீங்கள் ஷாப்பிங் செய்யும் வெப்சைட்டின் பெயரில் எதாவது எழுத்துப்பிழை உள்ளதா என கவனித்து பாருங்கள்.

மேலும் அறிமுகம் இல்லாத இமெயில்கள் மற்றும் இதுவரை கேள்விப்படாத முகவரியை கொண்ட இமெயில்களை தவிர்த்திடுங்கள்.

அதிரடி தள்ளுபடி : நீங்கள் வாங்கும் பொருட்களில் அளவுக்கு அதிகமான தள்ளுபடியை தருகிறார்கள் என்றால் சற்று யோசிக்க வேண்டும்.

உதாரணமாக புதிய ஐபோன் அல்லது ஐபேடு போன்றவற்றிற்கு 80% தள்ளுபடி என்று சொன்னால் அதை நம்பாதீர்கள். இது போன்ற போலி தள்ளுபடியை பெறும்போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

போலியான வெப்சைட் : நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அந்த வெப்சைட் போலியானதா அல்லது பாதுகாப்பானதா என்பதை அறிய “https” என்பது, எந்த வெப்சைட்டின் யூ.ஆர்.எல்-இல் இருக்க வேண்டும். இதில் “http” மட்டும் இருந்தால் அது பாதுகாப்பான வெப்சைட் கிடையாது என்று அர்த்தம்.

இதை மிக எளிதாக கண்டறிய அதன் முன்பகுதியில் பூட்டு போட்ட ஐகான் ஒன்று இருக்கும். வெப்சைட்டின் யூ.ஆர்.எல்-இல் இது இருந்தாலே போதும்.

பாஸ்வேர்டு ரீசெட் : உங்களின் பாஸ்வேர்ட்டை ரீசெட் செய்யும்போது அந்த குறிப்பிட்ட வெப்சைட்டில் இருந்து நீங்கள் பெறும் வெரிஃபிகேஷன் லிங்க் சரியானதாக என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

குறிப்பாக நவம்பர் மாதத்தில் எண்ணற்ற தள்ளுபடியை பல வெப்சைட்கள் அறிவிக்கும். அந்த நேரத்தில் நீங்கள் பாஸ்வேர்டு ரீசெட் செய்யும்போது, உங்களுக்கு வருகின்ற லிங்க் அந்த குறிப்பிட்ட வெப்சைட் மூலம் வந்ததா என சரிபார்த்து கொள்ளவும். அதன் பின்னரே அந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories