December 6, 2025, 9:03 AM
26.8 C
Chennai

கொரோனா: ஆம்புலன்ஸிலிருந்து வெளியே விழுந்த சடலம்!

dead body
dead body

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நாளொன்றுக்கு 3 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் செத்து மடிந்து வருகின்றனர்.

நாள்தோறும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுவதால், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதிய இடமில்லாமல் பல்வேறு மாநிலங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொத்து கொத்தாக மடியும் அவலம் ஏற்பட்டு வருகிறது.

உயிர்பிழைக்க தேவையான ஆக்சிஜன்தான் பற்றாக்குறையா..? என்று பார்த்தால், உயிரிழந்தவர்களை தகனம் செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எரியூட்டுவதற்காக சடலங்கள் வரிசை கட்டி வைக்கப்பட்டிருப்பது நாம் கண்கூட பார்த்து வருகிறோம்.

கொரோனாவால் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் மனதை உலுக்கும் விதமாக ஏதேனும் விஷயங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் விடிசா பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை, மருத்துவமனை நிர்வாகமே தகனம் செய்து வருகிறது.

இதற்காக, மருத்துவமனையில் இருந்து இறந்த உடல்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எரியூட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அப்படி, இன்று காலை வழக்கம் போல, சடலங்களை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்தது.

அப்போது, திடீரென ஆம்புலன்ஸின் பக்கவாட்டு கதவு திடீரென திறந்த நிலையில், சடலம் ஒன்று சாலையில் கீழே விழுந்தது. இது ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும், அங்கிருந்த பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories