இரவு பணி முடிந்து வந்த செவிலியர்.. கடத்திக் கூட்டு பாலியல் வன்கொடுமை!

vankodumai - 2026

அசாம் மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த செவிலியரை மூன்று நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இது ஒருபுறமிருக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட செவிலியர்கள் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது நமது கடமையாகும். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அசாம் மாநிலத்தில் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இளைஞர் தான் வீட்டில் இறக்கி விட்டு விடுவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துள்ளார்.

முதலில் வர மறுத்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒரு விடுதியில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

ஆனால் அந்த செவிலியருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் தான் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள இருந்ததாக கூறியிருந்தார்.

இதனால் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று குற்றவாளிகளை காவல்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் மூலம் அந்த செவிலியர் மனதளவில் மிகுந்த பாதிப்பை சந்தித்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அல்லும் பகலும் பாடுபடும் முன்கள பணியாளர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories