27-03-2023 9:41 PM
More
    Homeஇந்தியாஇரவு பணி முடிந்து வந்த செவிலியர்.. கடத்திக் கூட்டு பாலியல் வன்கொடுமை!

    To Read in other Indian Languages…

    இரவு பணி முடிந்து வந்த செவிலியர்.. கடத்திக் கூட்டு பாலியல் வன்கொடுமை!

    vankodumai - Dhinasari Tamil

    அசாம் மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த செவிலியரை மூன்று நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

    இது ஒருபுறமிருக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட செவிலியர்கள் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது நமது கடமையாகும். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

    அசாம் மாநிலத்தில் கச்சார் மாவட்டத்தை சேர்ந்த பெண் செவிலியர் ஒருவர் இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த இளைஞர் தான் வீட்டில் இறக்கி விட்டு விடுவதாக கூறி அந்த பெண்ணை அழைத்துள்ளார்.

    முதலில் வர மறுத்து அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஒரு விடுதியில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    ஆனால் அந்த செவிலியருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட காரணத்தினால் தான் வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொள்ள இருந்ததாக கூறியிருந்தார்.

    இதனால் அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று குற்றவாளிகளை காவல்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

    இந்த சம்பவம் மூலம் அந்த செவிலியர் மனதளவில் மிகுந்த பாதிப்பை சந்தித்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

    மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அல்லும் பகலும் பாடுபடும் முன்கள பணியாளர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    12 + four =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...