நிர்மலா சீதாராமன் மீது புகார் தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

புது தில்லி:

ராணுவத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு கேள்வி எழுப்பியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. மேலும், ஜம்மு காஷ்மீர் சோபியான் பகுதி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது புகார் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிமணியன் சுவாமி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 27ஆம் தேதி சோபியான் மாவட்டம் கன்னவ்போரா பகுதியில் ராணுவத்தினர் ஒரு வாகனத்தில் பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ராணுவத்தினர் இருந்த வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது.

இதை சமாளிக்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியாயினர், 9 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து ராணுவத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப் படும் என மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராணுவத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ”சோபியான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மக்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அது குறித்து சட்டசபையில் பேசிய மாநில முதல்வர் மெகபூபா முப்தி, நிர்மலா சீதாராமனிடம் அனுமதி பெற்றுதான் ராணுவத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இது குறித்து நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்”. என்று கோரியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories