நிர்மலா சீதாராமன் மீது புகார் தெரிவித்து சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம்!

புது தில்லி:

ராணுவத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு கேள்வி எழுப்பியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. மேலும், ஜம்மு காஷ்மீர் சோபியான் பகுதி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது புகார் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிமணியன் சுவாமி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 27ஆம் தேதி சோபியான் மாவட்டம் கன்னவ்போரா பகுதியில் ராணுவத்தினர் ஒரு வாகனத்தில் பயங்கரவாதிகள் குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ராணுவத்தினர் இருந்த வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியது.

இதை சமாளிக்க ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியாயினர், 9 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து ராணுவத்தினர் மீது வழக்குப் பதிவு செய்து மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப் படும் என மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராணுவத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் கேட்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், ”சோபியான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மக்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அது குறித்து சட்டசபையில் பேசிய மாநில முதல்வர் மெகபூபா முப்தி, நிர்மலா சீதாராமனிடம் அனுமதி பெற்றுதான் ராணுவத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இது குறித்து நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும்”. என்று கோரியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories