December 6, 2025, 9:15 AM
26.8 C
Chennai

இலங்கையை வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி!

india won asia cup 2023 - 2025
#image_title

ஆசிய கோப்பை 2023
இந்தியா அபார வெற்றி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆகஸ்டு 17 முதல் செப்டம்பர் 17 வரை நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.

இன்று கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இலங்கை பூவா தலையா வென்று முதலில் மட்டையாட முடிவுசெய்தது. ஆனால் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து இலங்கை அணி 50 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

இது இலங்கை அணியின் மிகக் குறைவான மொத்த ரன்களில் இரண்டாமிடத்தைப் பிடிக்கிறது. இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்கள் எடுத்தது முதலிடம் வகிக்கும் குறைவான மொத்த ஸ்கோராகும்.

இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன் இருவரும் சேர்ந்து 6.1 ஓவரில் 51 ரன் அடித்து எளிதில் வெற்றியைப் பெற்றுத் தந்தனர். முகம்மது சிராஜ் 7 ஓவர் வீசி 21 ரன் கொடுத்து 6 விக்கட் வீழ்த்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அந்தத் தொகையை (சுமார் 4.15 லட்சம்) மழை நேரத்தில் விளையாட்டு மைதானத்தை நன்றாகப் பராமரித்த மைதான ஊழியர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.

முன்னதாக இப்போட்டியில் பங்குபெற்ற அணிகள் இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் Aஇல் பாகிஸ்தான், இந்தியா, நேபால் ஆகிய அணிகள் இடம்பெற்றன. இந்தப்பிரிவில் இருந்து பாகிஸ்தானும் இந்தியாவும் அடுத்தசுற்றிற்குத் தகுதிபெற்றன.

இந்தச் சுற்றில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஆட்டம் மழை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

குரூப் B பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன. இப்பிரிவில் இருந்து இலங்கை அணியும், வங்கதேச அணியும் அடுத்த சுற்றுக்குத் தேர்வாயின.

அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றில் இந்தியா இலங்கை, பாகிஸ்தான் அணிகளை வென்று, வங்கதேச அணியிடம் தோற்றது. இலங்கை அணி பாகிஸ்தான், வங்கதேச அணிகளை வென்று, இந்திய அணியிடம் தோற்றது. பாகிஸ்தான் வங்கதேச அணியை வென்றது. இதனால் இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்குத் தேர்வாயின.

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 6 ஆட்டங்கள் ஆடி 302 ரன் அடித்து இப்போட்டியின் அதிக ரன் அடித்த வீரர் ஆனார். சிராஜ், இலங்கையின் பதிரனா இருவரும் தலா 11 விக்கட்டுகள் எடுத்து அதிக விக்கட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் ஆயினர்.

இந்தப் போட்டியில் விளையாடியதன் மூலம்
(1) ரோஹித் ஷர்மா 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரரானார். மேலும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன் அடித்த வீரர்களில் ஒருவரானார்
(2) ஜதேஜா தனது 200ஆவது விக்கட்டை இப்போட்டியில் வீழ்த்தினார்.
(3) விராட் கோலி 267 ஒருநாள் போட்டிகளில் 13,000 ரன் அடித்தவீரரானார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories