December 6, 2025, 1:02 AM
26 C
Chennai

IPL 2024: ஹீரோக்களான சுனில் நரேன், ஜோஸ் பட்லர்

ipl 2024 - 2025
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இருபத்தியாறாம் நாள்

ஐபிஎல் 2024 – 16.04.2024 

ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கொத்தா அணியை (223/6, சுனில் நரைன் 109, அங்கிரிஷ் ரகுவன்ஷி 30, ரிங்கு சிங் 20, ஆவேஷ் கான் 2/35, குல்தீப் சென் 2/46) ராஜஸ்தான் அணி (224/8, ஜாஸ் பட்லர் 107*, ரியன் பராக் 34, ரோவ்மன் போவல் 26 ஹர்ஷித் ராணா 2/45, வருண் சக்ரவர்த்தி 2/36, சுனில் நரேன் 2/36) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று கொல்கொத்தாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியில் இன்று தொடக்க வீரர் சுனில் நரேன் மிகச் சிறப்பாக ஆடினார். அவர் 56 பந்துகளில் 13 ஃபோர் மற்றும் 6 சிக்சர்களுடன் 109 ரன் அடித்தார்.

அவருக்குப் பிறகு அங்கிரிஷ் ரகுவன்ஷி (18 பந்துகளில் 30 ரன்), ரிங்கு சிங் (ஆட்டமிழக்காமல் 20 ரன்), ரசல் (10 பந்துகளில் 13 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் 7 பந்துகளில் 11 ரன்), பில் சால்ட் (13 பந்துகளில் 10 ரன்) என குறைந்த அளவில் ரன் களே எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் முக்கிய சுழல் பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் சாஹாலை சுனில் நரேன் சிக்சர்களாக விளாசினார். 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 223 ரன் எடுத்தது. 

224 ரன் என்ற சற்றே கடினமான இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் (9 பந்துகளில் 19 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) நன்றாக விளையாடினார் ஆனால் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 60 பந்துகளில் 107 ரன் அடித்தார். அதில் 9 ஃபோர்களும் 6 சிக்சர்களும் அடக்கம்.

அவருக்குத் துணையாக ரியன் பராக் (14 பந்துகளில் 34 ரன்) மற்றும் ரோவ்மன் போவல் (13 பந்துகளில் 26 ரன்) ஆகிய இருவர் மட்டுமே சற்று நிலைத்து ஆடி ரன் கள் சேர்த்தனர். பிற மட்டையாளர்கள் எவரும் இன்று சோபிக்கவில்லை. இறுதியில் கடைசி பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து கொல்கொத்தா அனி வெற்றிக்கனியை எட்டிப்பிடித்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஸ் பட்லர்  தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

16.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 761120.667
கொல்கொத்தா64281.399
சென்னை64280.726
ஹைதராபாத்64280.502
லக்னோ63360.038
குஜராத்6336-0.637
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
டெல்லி7254-1.185
பெங்களூரு6152-1.124

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories