மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றிய காஷ்மீர் சட்டசபை!

Published:

kashmir assembly - 2026
#image_title

சிறப்பு அந்தஸ்து: காஷ்மீர் பேரவையில் தீர்மானம்.

  • சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றம். 
  • தீர்மானத்துக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டதால் பேரவையில் அமளி ஏற்பட்டது.
  • ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு – காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு,  அதில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

இதன் பின்னர் தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின், சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும், ஏழு முறை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் ரஹீம் ராத்தர்,  சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

இந்நிலையில் இன்று ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்தும், அதை மீண்டும் அளிக்கக் கோரியும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பாஜக., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ.,க்கள் எதிர்க் குரல் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. 

கடும் அமளிக்கு மத்தியில் சட்டசபையில், காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனமும் ஏளனமும் தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img