வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்று கேஜ்ரிவால் புகார்: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

புது தில்லி தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பயன்படுத்தவுள்ள வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் புகார் தெரிவித்தார். தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேறு கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள், பாஜகவுக்கு சாதகமாக மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த புகாரை தலைமைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. தில்லி கண்டோன்மண்ட் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் திங்கள்கிழமை சோதனை நடத்தியபோது, நான்கு இயந்திரங்களில் வேறு கட்சிக்கான பட்டனை அழுத்தினால், பாஜகவின் தாமரை சின்னத்துக்கு எதிரே உள்ள விளக்கு எரிவதாக கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மாவிடம் புதன்கிழமை புகார் அளித்தனர். அப்புகாரைப் பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், எவ்வித கோளாறுகளுக்கும் இடம் கொடுக்காத வகையில்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பல கட்ட சோதனைகள் நடத்திய பிறகே அவர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தனர். மேலும், வேறு கட்சிக்கு அளிக்கும் வாக்கு கூட பாஜகவுக்கு சாதகமாக விழுவதாக சுமத்திய புகாரை நேருக்கு நேராக நிரூபிக்கத் தயாரா? என்று அதிகாரிகள் கேட்டபோது, கேஜரிவால் குழுவினர் சரிவர பதில் அளிக்க வில்லை. இதையடுத்து, அவரது புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories