ஆண்டுகள் பல இழுத்தடிக்கும் காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவே மோடி விரும்புகிறார்!

arjun ram meghwal - 2026

பல ஆண்டுகளாக இருந்து அரசியல் ஆக்கப்பட்டு விட்ட காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றே மோடி விரும்புகிறார் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கூறியுள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில், நீர் நிலைகளைத் தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பான இரு வார நிகழ்வு தில்லியில் நிறைவடைந்தது. அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்து விளக்குவதற்காக, தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், சத்யபால் சிங், மத்திய நீர்வளத் துறை செயலர் யு.பி.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், “மோடி அரசு, ஒரு பொறுப்பான அரசு என்று தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு ஆக்கப்படக் கூடாது. பல ஆண்டுகள் பழமையான இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவே மோடி அரசு விரும்புகிறது. உச்ச நீதிமன்றம் சொன்னபடி, வரைவு திட்டம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

வரைவு திட்டத்தை வடிவமைப்பதற்காக, நான்கு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் நீர்வளத்துறைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம். எத்தகைய செயல் திட்டத்தை அவர்கள் விரும்புகிறார்கள் என்று நான்கு மாநிலங்களிடமும் கருத்து கேட்டுள்ளோம். புதிய அமைப்புக்கு தொழில்நுட்ப வல்லுநர், சட்ட வல்லுநர், அதிகாரி ஆகியோரில் யாரை தலைவராக நியமிக்கலாம் என்பது குறித்தும் கருத்து கேட்டுள்ளோம். கூட்டாட்சி முறையில் மாநிலங்களிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு இருக்கிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories