December 5, 2025, 6:05 PM
26.7 C
Chennai

பகல்ல ‘அம்மா’…ன்றாங்க; இரவுல ‘அதுக்கு’ வா…ன்றாங்க: தெலுகு நடிகை சந்த்யா நாயுடு

santhiya naidu - 2025

ஹைதராபாத்: தெலுகு சினிமா உலகமே மிகவும் பரபரப்பாக இருக்கிறது. ஜூனியர் நடிகைகளின் குரல் மிகத் தெளிவாகவும் அதிக சத்தமாகவும் கேட்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் நடிகை ஸ்ரீரெட்டி துவக்கி வைத்த உரிமைக் குரல்தான்!

உன்னுடைய உள்ளாடை ட்ரான்ஸ்பரண்டாக உள்ளதா என்று ஒரு நடிகையிடம் இயக்குனர் கேட்டாராம். இந்த அவலக் குரலைக் கேட்டு தெலுகு ரசிகர்கள் ஆடித்தான் போயுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே தெலுகு திரையுலகம் கலக்கத்தில்தான் உள்ளது.

srireddy2 - 2025

நடிகை ஸ்ரீ ரெட்டி கடந்த சில நாட்களாக தன்னை பாலியல் தொந்தரவு செய்தவர்களை புகைப்படங்களோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். பாகுபலி ராணாவின் தம்பி தொடங்கி, பிரபல இயக்குனர்கள் என்று அவர் வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தும் பட்டியல் நீள்கிறது. இதனால் பலர் கடும் பயத்தில் உள்ளனர். ஸ்ரீரெட்டிக்கு இதற்காக பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தத் தொடக்கப்புள்ளி, நடிகைகள் பலருக்கு உத்வேகம் அளித்து, தங்களுக்கு பாலியல் தொல்லைகளைத் தந்தவர்கள் குறித்து வெளிப்படையாகக் கூறுவதற்கு வழி செய்திருக்கிறது.

18 வயது முதல் 40 வயது வரையிலான திரை நட்சத்திரங்களை அழைத்து அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லுமாறு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது, மகளிர் என்.ஜி.ஓ., அமைப்பு ஒன்று. சோமாஜிகுடா பிரஸ் க்ளப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் பலர் தங்கள் மனம் திறந்து பல விஷயங்களைச் சொன்னார்கள்.

நடிகை சந்தியா நாயுடு ஒரு சம்பவத்தைக் கூறி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். தெலுகு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர், கடந்த 10 ஆண்டுகளாக எங்கே போனார் என்று தெரியாத அளவுக்கு காணாமல் போனார். இந்நிலையில் சந்தியா நாயுடு கூறியபோது, பொதுவாகவே எனக்கு அம்மா, அத்தை, அக்கா போன்ற கதாபாத்திரங்கள் தான் தேடி வரும். நானும் அதனை ஏற்று நடித்துக் கொடுப்பேன். படப்பிடிப்புத் தளத்தில் என்னிடம் வாங்கம்மா, போங்கம்மா என்று மரியாதையாகப் பேசும் இயக்குனர்களும் நடிகர்களும், இரவு ஆகிவிட்டால் போதும், ‘அதுக்கு வா’ என்று படுக்கைக்கு அழைப்பார்கள். ஓர் இயக்குனர், ஒருமுறை, உன்னுடைய உள்ளாடையைக் கழற்றிக் காட்டு… அது ட்ரான்ஸ்பரண்டாக உள்ளதா எனப் பார்க்க வேண்டும் என்றார்… என சந்தியா நாயுடு கூறிய போது, பலரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை அபூர்வா, ஸ்ரீ ரெட்டி, சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் மனம் திறந்து பல விஷயங்களைப் பேசினர். அவை ஒவ்வொன்றாக இப்போது வெளிவந்து, தெலுகு திரையுலகை ஆட்டம் காணச் செய்து வருகிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories