சுரி (மேற்கு வங்கம்):
தேர்தல் ஆணையம் எங்கள் வசத்தில் உள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜோய் பானர்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநில பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஜோய் பானர்ஜி, மயூரேஸ்வர் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது,
தேர்தல் ஆணையம் எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது, அடுத்த தேர்தல் ராணுவத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினால் தோற்கடிக்கப்பட்டவர் இவர்.
அவர்கள் எங்களை ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டனர். ஆனால் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அது நடைபெறாது ஏனென்றால் ராணுவத்தின் கண்காணிப்பில் நடத்தப்படும் தேர்தல், தேர்தல் ஆணையம் எங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. என்றார்.
இந்நிலையில், அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியது. இவ்வாறு பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதை அடுத்து,, இது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.