புதுதில்லி :
இந்தியா – இலங்கை இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளையும் சேர்ந்த உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் முதல் நாள் கூட்டத்தில், இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இலங்கை ராணுவத்தின் முப்படையினருக்கு தில்லி, டேராடூன், நீலகிரியிலுள்ள ராணுவக் கல்லுாரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களில் இலங்கை வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கவும், இந்திய ராணுவக் கல்லுாரிகளில் பயிலும் இலங்கை அதிகாரிகளுக்கு அப்பயிற்சியை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.


