February 21, 2026, 7:23 AM
24.6 C
Chennai

காவிரி வழக்கில் தாமதத்துக்கு பிரதமர் மோடியைக் காரணம் காட்டிய மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்!

supreme court of india - 2026

புது தில்லி: பிரதமர், மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி பங்கீட்டிற்கான வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரினார்.

காவிரி தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை தொடங்கியது. காவிரி வழக்கில் வரைவுத் திட்டத்தை மே 3ஆம் தேதி இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. அப்போது, உச்ச நீதிமன்றத்தில், இந்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது மத்திய அரசு.

அப்போது, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு திட்டத்தை குறித்த காலத்தில் உடனடியாகத் தாக்கல் செய்ய இயலவில்லை. இதற்கு, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் இந்த வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று கூறியுள்ளது மத்திய அரசு.

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் ஈடுபட்டுள்ளதால், நீர் பங்கீட்டு வரைவு திட்டத்துக்கு பிரதமர் ஒப்புதல் பெற முடியவில்லை. பிரதமர், துறை சார்ந்த அமைச்சர் ஒப்புதல் பெற 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து காவிரி வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். மேலும், வரைவு திட்டம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories