பரபரப்பான திருப்பம்! வாஜ்பாய் வழியில் எடியூரப்பா பதவி விலகல் உரை நிகழ்த்தப் போகிறார்?

yediyurappa taking oath horz - 2026

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நிலவும் பரபரப்பான திருப்பமாக, வாஜ்பாய் வழியில் எடியூரப்பாவும் பதவி விலகல் உரையை இன்று நிகழ்த்தப் போகிறார் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை முதல்வர் எடியூரப்பா சந்திக்கவுள்ளதாக வெளியான தகவலால், அவர் ராஜினாமா முடிவு எடுப்பார் என்றும் ஒரு தகவல் உலாவருகிறது. 

1996 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பாஜக., அப்போது முதல் முறையாக, தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. இதனால், அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பாஜக.,வை ஆட்சி அமைக்க வருமாறு அழைத்தார். இதன் அடிப்படையில், பாஜக., சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட வாஜ்பாய், பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், நாடாளுமன்றத்தில் ஆதரவு கோரி நீண்ட உரை நிகழ்த்தினார்.

ஆனால், புதிதாக வந்ததால் அப்போது பாஜக.,வை ஆதரிக்க மற்ற எந்தக் கட்சிகளும் முன்வரவில்லை. இதனால், தன்னால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலவில்லை என்று, ராஜினாமா செய்தார். முன்னதாக நீண்ட உரையையும் நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார். அதை அடுத்தே, அப்போது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய ஒரு கூட்டணியை அமைத்து, கூட்டணியின் தலைவராக தேவேகவுடவைத் தேர்வு செய்து, பிரதமர் ஆக்கினர். அப்போது, தேவேகவுடவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் தனது ஆதரவை நீக்கிக் கொண்டது காங்கிரஸ். இதை அடுத்து தேவேகவுட தலைமையிலான ஆட்சியும் கவிழ்ந்தது. ஆனால் அதன் பின்னர் பெரும்பான்மையுடன் பாஜக.,வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.

அது போல், இப்போதும் கர்நாடகத்தில் ஒரு காட்சி நடைபெறுகிறது. தனிப்பெரும் கட்சியாகத் திகழும் பாஜக.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டும், நீதித்துறை சார்ந்த நெருக்கடிகளும் எடியூரப்பாவுக்கு பெரும் சிக்கல்களைத் தந்துள்ளன. இதனால் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, தேவேகவுடவின் மகன் குமாரசாமி ஆட்சி அமைக்க வழிகோல வேண்டும் என்றும், காங்கிரஸ் எப்படியும் தேவகவுட மகன் குமாரசாமியை கவிழ்த்து விட்டுவிடும் என்றும், வரும் 2019 பொதுத் தேர்தலுக்குள் இது நடக்கும், எனவே பொதுத் தேர்தலுடன் கர்நாடக தேர்தலை நடத்தலாம் அல்லது மாற்று ஏற்பாடுகள் அதற்குள் சாத்தியமாகலாம் என்றும் பாஜக.,வுக்குள் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

எனவே, வாஜ்பாய் வழியில் எடியூரப்பாவும் பதவி விலகல் உரை நிகழ்த்துவாரா அல்லது நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்வாரா என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories