கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்ற பிரதமர் மோடி

01 June13 modi 09486 - 2026கடந்த மே மாதம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ட்விட்டரில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, `சமூக வலைதளங்களில் நீங்கள் உங்கள் உடல்களை எப்படி ஃபிட் ஆக வைத்துள்ளீர்கள் என்பது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஃபிட்னஸ் சேலஞ்சை அனுப்புங்கள்’ என தெரிவித்ததுடன், பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன், இந்திய கேப்டன் கோலி மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

அவர் பதிவிட்ட அடுத்த இரண்டு தினங்களில் இந்திய கேப்டன் விராட் கோலி இந்த சேலஞ்சை ஏற்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார். மேலும் அவர், தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, இந்தியப் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, கோலியின் சவாலை ஏற்பதாகத் தெரிவித்திருந்தார். ட்விட்டரில் அவர், ‘இந்தச் சாவலை ஏற்கிறேன் விராட். விரைவில் எனது ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை பகிர்கிறேன்’ என பதிவிட்டிருந்தார்.

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

இந்நிலையில் இன்று அவர், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “எனது காலை உடற்பயிற்சி தருணங்களை பகிர்ந்துள்ளேன். யோகாவை தவிர, இயற்கையின் 5 கூறுகள் அடங்கிய ஒரு பாதையில் நான் நடக்கிறேன். இது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். மேலும் நான் மூச்சுப் பயிற்சியும் மேற்கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டில், “ நான் இந்த சேலஞ்சை கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ஆகிய இருவரும் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன். மேலும், இதை அனைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறிப்பாக 40 வயதைத் தாண்டியவர்கள் செய்யுமாறு கேட்கிறேன். இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்தால் நம் வாழ்வில் சில புதிய மாற்றங்களை உணரலாம். ” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories