தெலங்கானாவின் நிர்மல் டவுனில், ஆலயம் ஒன்றில் கட்டப் பட்டிருந்த மணியில், ஒரு துண்டு வைத்து(டவலால்) அதன் நாவை கட்டிச் சென்றிருக்கிறார்கள் காவல் துறையினர்.
காரணம் அருகே உள்ள மசூதியில் தொழுகை நடக்கும் போது, இந்த மணிச் சத்தத்தால் அவர்களுக்கு தொந்தரவு நேரக் கூடாது என்று! ஆனால், இந்தப் பின்னணியை அறியாத மூன்று பேர், ஆலய மணியில் ஏன் துண்டு கட்டப் பட்டிருக்கிறது என்ற எண்ணத்தில் சிரமப்பட்டு துண்டை அகற்றி, மணியை அடித்திருக்கிறார்கள்.
இதை அடுத்து அவர்கள் மூன்று பேருக்கும் அருகில் இருந்தவர்கள் அடி உதை கொடுத்து, அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனராம். இதை அடுத்து காவல் நிலையத்தில் இந்திய சட்டப் பிரிவு 25ஐ மீறியதாக புகார் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது குறித்த தகவல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


