நேபாள பனிப்பொழிவில் சிக்கிய இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரம்!

Published:

helecoptor nepal - 2026

நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 525 இந்தியர்கள் கடுமையான பனிபொழிவால் சிக்கினர். தூதரக அதிகாரிகள் மூலம் நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக மீட்கும் பணி தொடங்கப்பட்டது.

சிமிகோட் பகுதியில் சிக்கிதவித்த 19 தமிழர்கள் மீட்பு

கைலாஷ் யாத்திரை சென்றபோது தமிழகத்தை சேர்ந்த 19 சிக்கி தவித்தனர். சிமிகோட் பகுதியில் சிக்கித்தவித்த 19 தமிழர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் சிமிகோட் பகுதியில் இருந்து நேபாள் கஞ்ச் பகுதிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

உதவி எண்கள் அறிவிப்பு..!

கைலாய யாத்திரைக்கு சென்று நேபாளத்தில் சிக்கி இருப்பவர்களை மீட்க இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.

தமிழ் : 977-9808500642,

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

கன்னடம் : 977-9823672371,

தெலுங்கு : 977-9808082292,

மலையாளம் : 977-9808500644.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img