தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீர் தர ஆந்திரா ஒப்புதல்: செப். 15ம் தேதி திறக்க வாய்ப்பு

DAM - 2026

சென்னை: தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீர் தர ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதால்,  வரும் 15ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி.

இதை தவிர்த்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி வீதம் ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்க வேண்டும். இந்நிலையில், தற்போது சென்னை மாநகரில் உள்ள 4 ஏரிகள் வறண்டு வரும் சூழ்நிலையில், கிருஷ்ணா நீர் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டும். ஆனால், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 3 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதனால், அங்கிருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக சைலம் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

215 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 209 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து 78 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அந்த அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு நீர் திறந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும்.

எனவே, ஒப்பந்தப்படி தண்ணீர் பெற சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் தலைமையில் பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆந்திர மாநில நீர்வளத்துறை தலைமை பொறியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், ஒப்பந்தப்படி 12 டிஎம்சி நீர் தர ஆந்திர நீர்வளத்துறை ஒப்பதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, சைலம் அணையில் இருந்து சோம சீலா அணைக்கு 12,781 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது 78 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்ட சோம சீலா அணையில் தற்போது 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த அணையில் 23 டிஎம்சிக்கு மேல் நீர் இருந்தால்தான் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும்.

ஓரிரு நாளில் 23 டிஎம்சியை எட்டும் என்பதால், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது. கண்டலேறு அணையில் 8 டிஎம்சி தண்ண்ணீர் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இதைத்தொடர்ந்து வரும் 15ம் தேதிக்குள் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories