தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீர் தர ஆந்திரா ஒப்புதல்: செப். 15ம் தேதி திறக்க வாய்ப்பு

DAM - 2026

சென்னை: தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீர் தர ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதால்,  வரும் 15ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி.

இதை தவிர்த்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி வீதம் ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்க வேண்டும். இந்நிலையில், தற்போது சென்னை மாநகரில் உள்ள 4 ஏரிகள் வறண்டு வரும் சூழ்நிலையில், கிருஷ்ணா நீர் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தவணை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டும். ஆனால், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 3 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதனால், அங்கிருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக சைலம் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

215 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 209 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து 78 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோமசீலா அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அந்த அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு நீர் திறந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

எனவே, ஒப்பந்தப்படி தண்ணீர் பெற சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் தலைமையில் பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஆந்திர மாநில நீர்வளத்துறை தலைமை பொறியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், ஒப்பந்தப்படி 12 டிஎம்சி நீர் தர ஆந்திர நீர்வளத்துறை ஒப்பதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, சைலம் அணையில் இருந்து சோம சீலா அணைக்கு 12,781 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது 78 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்ட சோம சீலா அணையில் தற்போது 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த அணையில் 23 டிஎம்சிக்கு மேல் நீர் இருந்தால்தான் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும்.

ஓரிரு நாளில் 23 டிஎம்சியை எட்டும் என்பதால், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது. கண்டலேறு அணையில் 8 டிஎம்சி தண்ண்ணீர் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இதைத்தொடர்ந்து வரும் 15ம் தேதிக்குள் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories