தோனி பிச்சை எடுப்பார் என்ற தந்தையின் சாபத்தில் உடன்பாடில்லை: யுவராஜ்

Published:

தோனி குறித்து தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறிய கருத்துகளுக்கு, பதிலளித்துள்ள யுவராஜ் சிங், தனது தந்தையின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். தோனி குறித்து மோசமாக கருத்து தெரிவித்து பேட்டியளித்திருந்தார் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ்சிங். தோனி ராவணனைப் போன்ற ஆணவக்காரர், அவர் ஒருநாள் பிச்சைதான் எடுப்பார், என்பது போன்ற கருத்துகளை கூறியிருந்தார். இதுகுறித்து டிவிட்டரில் பதிலளித்துள்ள யுவராஜ் சிங், ஊடகங்களில் வெளியான செய்திக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் தோனி தலைமையில் விளையாட விருப்பம் உள்ளது என்று ஏற்கெனவே கூறிவிட்டேன். தோனியை சந்தித்து அவர் தந்தையானதற்கு வாழ்த்துகளை தெரிவிக்க நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார். ஏற்கெனவே ஒருமுறை யோக்ராஜ் இவ்வாறு தோனி மீது குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தபோதும், யுவராஜ் சிங் அந்த விவகாரத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

Related articles

Recent articles

spot_img